TN Fisherman Issue: இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டை கண்டித்து காரைக்கால் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
TN Fisherman Issue: இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டை கண்டித்து காரைக்கால் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Published on: February 11, 2025 at 1:08 pm
இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதை கண்டித்து காரைக்காலில் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீப காலங்களாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. சர்வதேச எல்லை பகுதியை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில் பிப்ரவரி எட்டாம் தேதி ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து இரண்டு ரோந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையில் இந்த அத்துமீறலுக்கு எதிராக தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த விவகாரத்தில் மாநில அரசு மற்றும் மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக பிப்ரவரி 3ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களும் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் தான். அதற்கு முன்னதாக ஜனவரி 28ஆம் தேதி இலங்கை கடற்படை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் ஐந்து மீனவர்கள் காயமடைந்தனர் அதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த இரு மாதத்தில் மட்டும் இலங்கை கடற்படை தொடர்ச்சியாக தமிழக மீனவர்களை கைது செய்வது அதிகரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க வேண்டும் என்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இதையும் படிங்க பெரியாரை விரும்பும் தம்பிகள்.. கடும் உத்தரவு பிறப்பித்த சீமான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com