சென்னை, ஜன.31, 2026: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்-தலைவர் மருத்துவர் ராமதாஸ் சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் கடந்த 29-ம் தேதி தனது குடும்பத்துடன் பெங்களூரு நாகர்பாவி பகுதிக்கு மகிழுந்தில் சென்றார்.
அப்போது கர்நாடக ரக்ஷண வேதிகா அமைப்பைச் சேர்ந்த டி.ஏ.தர்மராஜ கவுடா மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழி மறித்து மிரட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை அகற்றச் சொல்லி வற்புறுத்தி, கார் கண்ணாடியை உடைத்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
காரில் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் இருந்ததையும் பொருட்படுத்தாமல், அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்து, அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது அநாகரிகத்தின் உச்சமாகும்.
எனவே தனிமனித உரிமையைப் பறிக்கும் வகையிலும், இரு மாநில மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலும் செயல்பட்ட டி.ஏ.தர்மராஜ கவுடா மற்றும் அவருடன் இருந்த 4 நபர்கள் மீது கர்நாடக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
‘மேலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் வருங்காலத்தில் இது போன்ற அநாகரிகச் செயல்கள் குறைய வழிவகுக்கும் என இந்த அறிக்கையின் வாயிலாக தமிழக, கர்நாடக அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்” எனவும் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 65 லட்சம் கம்மவர்கள்.. பிப்.8 ஸ்ரீபெரும்புதூரில் மாநாடு!
Assembly Election 2026: ” யார் எந்த மாதிரியான அவதூறுகள் பரப்பினாலும் இறைவன் அருளால் நாம் நமது இலக்கை அடைய முடியும் என பேசிய தமிழக வெற்றிக்…
puducherry Election 2026: புதுச்சேரி அரசியலில் லட்சிய ஜனநாயக கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. இந்தக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது….
Chennai Acid Attack : சென்னையில் திராவகம் வீச்சுக்குள்ளான பெண் பகுதி பார்வையை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்….
Flight Seats: விமானங்களில் 60% இருக்கைகளுக்கு, “இருக்கை கட்டணம்” வசூலிக்க கூடாது என்ற உத்தரவு வெளியாகியுள்ளது….
Mallikarjun kharge: முன்னாள் பிரதமர் தேவேக விழாவின் மாநிலங்களவை பதவி நிறைவடைந்துள்ள நிலையில் அவரின் பிரிவு உபசார விழாவில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகா…
Share Market Today: இந்திய பங்குச்சந்தை இன்றைய வர்த்தகத்தை வலுவாக நிறைவு செய்தது. நிப்டி குறியீட்டை பொறுத்தமட்டில், 23,800 அருகில் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்