Dr. Ramadoss: பீகாரில் மட்டுமல்ல தென் கொரியா, ஜப்பான், மொரீஷியஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கூட மாம்பழ சின்னத்தில் போட்டியிடப் போகிறோம்” என்றார்.
Dr. Ramadoss: பீகாரில் மட்டுமல்ல தென் கொரியா, ஜப்பான், மொரீஷியஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கூட மாம்பழ சின்னத்தில் போட்டியிடப் போகிறோம்” என்றார்.
Published on: September 24, 2025 at 2:17 pm
Updated on: September 24, 2025 at 3:22 pm
சென்னை, செப்.24, 2025: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பீகாரில் பா.ம.க போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளித்த ராமதாஸ், “பீகாரில் மட்டுமல்ல தென் கொரியா, மொரீஷியஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கூட மாம்பழ சின்னத்தில் போட்டியிடப் போறாங்க” என்றார்.
அன்புமணி மீது மறைமுக தாக்கு
தொடர்ந்து அன்புமணி ராமதாஸை மறைமுகமாக விமர்சித்து பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், “நாங்கள்தான் பா.ம.க என சொல்லிக் கொண்டு ஒரு கும்பல் சுற்றித் திரிகிறது. அவர்கள் பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறி மாம்பழ சின்னம் பெற்றுள்ளார்கள்” என்றார். மருத்துவர் ராமதாஸின் இந்தப் பேச்சு வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு திடீர் உடல்நலக் குறைவு.. மருத்துவமனையில் அனுமதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com