அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை இன்றைக்குள் வழங்க வேண்டும் ; மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss | 20 நாட்களாகியும் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாத தீபஒளி ஊக்கத்தொகையை இன்றைக்குள் வழங்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: October 29, 2024 at 11:24 am

Dr Ramadoss | பா.ம.க. நிறுவனர் மருத்தவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு தீப ஒளி திருநாளையொட்டி 20% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 10-ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன் பிறகு இன்றுடன் 20 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு தீப ஒளி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. அதேபோல், மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. உழைக்கும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் அரசு காட்டும் தேவையற்ற தாமதம் கண்டிக்கத்தக்கது.

வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், அதே வேகத்தில் அது வழங்கப்பட்டு விடும் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் விஞ்சியது. இறுதியாக நேற்று திங்கள் கிழமை தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று இரவு வரை தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. தீப ஒளி திருநாளுக்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் ஊக்கத்தொகை வழங்காமல் தமிழக அரசு தாமதப்படுத்துவன் நோக்கம் தெரியவில்லை. குறித்த காலத்தில் வழங்கப்படாத ஊக்கத்தொகை பயனற்றதாகி விடும் என்பதை அரசு உணர வேண்டும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் அனைத்து ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் இன்று முதல் தீப ஒளி திருநாள் வரை சிறப்புப்பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், தீப ஒளி முடிவடையும் வரை அவர்களால் குடும்பத்தினருடன் சென்று தீப ஒளிக்கு தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவது சாத்தியப்படாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தீப ஒளிக்கான ஊக்கத்தொகையை போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர்களின் வலிகளை புரிந்து கொள்ள அரசு தவறிவிட்டது. ஒரு நாளுக்கு 12 மணி நேரம் பணி செய்ய சட்டம் கொண்டு வந்த முதலாளித்துவ அரசிடமிருந்து இத்தகைய குறைந்தபட்ச தொழிலாளர் ஆதரவு செயல்பாடுகளை எதிர்பார்ப்பது கூட பாட்டாளிகளின் தவறு தான்.

தீப ஒளி திருநாளுக்கு முழுமையாக நாளைய ஒரு பொழுது மட்டுமே இருக்கும் நிலையில், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தீப ஒளி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்று தீப ஒளிக்கான பொருட்களை வாங்குவதற்கு வசதியாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பணி இடைவெளி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க 4,900 சிறப்பு பேருந்துகள் இன்று முதல்.. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்! Anbumani Ramadoss

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!

Anbumani Ramadosss: “திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள் என்ற தலைப்பில் பா.ம.க தலைவர்…

மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம்.. மராட்டியத்தில் மின் கட்டணம் குறைப்பு.. தமிழ்நாட்டில் அதிகரிப்பு ஏன்? அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss

மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம்.. மராட்டியத்தில் மின் கட்டணம் குறைப்பு.. தமிழ்நாட்டில் அதிகரிப்பு

Anbumani Ramadoss: மராட்டியத்தில் 26% மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 42% உயர்வு அடைந்துள்ளது. மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் என்கிறார் பா.ம.க.வின் அன்புமணி…

ஆட்சியாளர்கள் செய்யவே கூடாத குற்றம்.. தி.மு.க மீது அன்புமணி பாய்ச்சல்! Doctor Anbumani Ramadoss

ஆட்சியாளர்கள் செய்யவே கூடாத குற்றம்.. தி.மு.க மீது அன்புமணி பாய்ச்சல்!

Anbumani Ramadoss: நியாயவிலைக்கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே…

கர்ப்பிணியை தாக்குவது காவல் அறமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி! Anbumani Ramadoss

கர்ப்பிணியை தாக்குவது காவல் அறமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

Anbumani Ramadoss: பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விகாரத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்…

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி.. மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார்? அன்புமணி ராமதாஸ் Doctor Anbumani Ramadoss

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி.. மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார்? அன்புமணி

Doctor Anbumani Ramadoss: கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி; மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார் முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா? என காட்டமாக…

ஊர்க்காவல் படையினருக்கு ஊதிய உயர்வு; பணி நிரந்தரம்.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்! PMK party leader Dr Anbumani

ஊர்க்காவல் படையினருக்கு ஊதிய உயர்வு; பணி நிரந்தரம்.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Dr Anbumani: ஊர்க்காவல் படையினருக்கு பணி நிலைப்பு; ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com