அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை இன்றைக்குள் வழங்க வேண்டும் ; மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss | 20 நாட்களாகியும் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாத தீபஒளி ஊக்கத்தொகையை இன்றைக்குள் வழங்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: October 29, 2024 at 11:24 am

Dr Ramadoss | பா.ம.க. நிறுவனர் மருத்தவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு தீப ஒளி திருநாளையொட்டி 20% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 10-ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன் பிறகு இன்றுடன் 20 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு தீப ஒளி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. அதேபோல், மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. உழைக்கும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் அரசு காட்டும் தேவையற்ற தாமதம் கண்டிக்கத்தக்கது.

வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், அதே வேகத்தில் அது வழங்கப்பட்டு விடும் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் விஞ்சியது. இறுதியாக நேற்று திங்கள் கிழமை தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று இரவு வரை தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. தீப ஒளி திருநாளுக்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் ஊக்கத்தொகை வழங்காமல் தமிழக அரசு தாமதப்படுத்துவன் நோக்கம் தெரியவில்லை. குறித்த காலத்தில் வழங்கப்படாத ஊக்கத்தொகை பயனற்றதாகி விடும் என்பதை அரசு உணர வேண்டும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் அனைத்து ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் இன்று முதல் தீப ஒளி திருநாள் வரை சிறப்புப்பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், தீப ஒளி முடிவடையும் வரை அவர்களால் குடும்பத்தினருடன் சென்று தீப ஒளிக்கு தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவது சாத்தியப்படாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தீப ஒளிக்கான ஊக்கத்தொகையை போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர்களின் வலிகளை புரிந்து கொள்ள அரசு தவறிவிட்டது. ஒரு நாளுக்கு 12 மணி நேரம் பணி செய்ய சட்டம் கொண்டு வந்த முதலாளித்துவ அரசிடமிருந்து இத்தகைய குறைந்தபட்ச தொழிலாளர் ஆதரவு செயல்பாடுகளை எதிர்பார்ப்பது கூட பாட்டாளிகளின் தவறு தான்.

தீப ஒளி திருநாளுக்கு முழுமையாக நாளைய ஒரு பொழுது மட்டுமே இருக்கும் நிலையில், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தீப ஒளி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்று தீப ஒளிக்கான பொருட்களை வாங்குவதற்கு வசதியாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பணி இடைவெளி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க 4,900 சிறப்பு பேருந்துகள் இன்று முதல்.. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

உள்ளாட்சி அதிகாரத்தை பறிப்பது எவ்வகையில் நியாயம்? திமுகவுக்கு அன்புமணி கேள்வி! Anbumani has questioned the DMK on how it is fair to take away local government power.

உள்ளாட்சி அதிகாரத்தை பறிப்பது எவ்வகையில் நியாயம்? திமுகவுக்கு அன்புமணி கேள்வி!

மாநில தன்னாட்சி கோரும் திமுக, உள்ளாட்சிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை பறிப்பது என்ன வகை ஜனநாயகம் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்….

தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் : அன்புமணி ராமதாஸ் Sanitation workers' salaries should be paid immediately: Anbumani Ramadoss

தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் : அன்புமணி ராமதாஸ்

அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்கள் 30,000 பேருக்கு ஓராண்டாக வழங்கப்படாத ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….

மின்சார வாரியத்தில் ரூ.1.6 லட்சம் கோடி இழப்பு? அன்புமணி பகீர் புகார்! Electricity Board loses Rs 1.6 lakh crore? Anbumani complains!

மின்சார வாரியத்தில் ரூ.1.6 லட்சம் கோடி இழப்பு? அன்புமணி பகீர் புகார்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்கள், முறைகேடுகளை களைய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….

கடந்த ஓராண்டில் 569 மீனவர்கள் கைது; தீர்வு எப்போது? அன்புமணி ராமதாஸ் கேள்வி 569 fishermen arrested in the last one year; When will the solution be found? Anbumani Ramadoss asks

கடந்த ஓராண்டில் 569 மீனவர்கள் கைது; தீர்வு எப்போது? அன்புமணி ராமதாஸ் கேள்வி

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்….

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு ; சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதா? அன்புமணி கேள்வி Anbumani has questioned the DMK on how it is fair to take away local government power.

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு ; சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதா? அன்புமணி

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் திமுக தொடர்பு வெளிவராமல் தடுக்க துடிப்பது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்….

ஆறு மாதங்களில் 50 ஆயிரம் கோடி கடன்; தமிழ்நாட்டின் பொருளாதாரம் எங்கே போகிறது? அன்புமணி கேள்வி Anbumani questions about Tamil Nadu's economy

ஆறு மாதங்களில் 50 ஆயிரம் கோடி கடன்; தமிழ்நாட்டின் பொருளாதாரம் எங்கே போகிறது?

கடந்த ஆறு மாதத்தில் 50 ஆயிரம் கோடி கடன்; தமிழ்நாட்டின் பொருளாதாரம் எங்கே செல்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com