அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய பிரச்னைகளை சரி செய்க.. மருத்துவர் ராமதாஸ்

Doctor Ramadoss: “அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை சரி செய்ய வேண்டும்” என மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Published on: September 30, 2025 at 11:58 am

Updated on: September 30, 2025 at 11:59 am

சென்னை, செப்.30, 2025: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை (செப்.30, 2025) விடுத்துள்ள அறிக்கையில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிகமான நெல் விளைச்சல் காரணமாகவும், இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடில்லாமல் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விவசாயிகள் நேரடியாக அரசிடம் அவர்கள் விளைவித்த நெல்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக 1973-ஆம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடங்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 1996-ல் தமிழ்நாடு முழுமைக்குமாக பரவலாக்கப்பட்டது, தற்போது தமிழகம் முழுவதும் 3,529 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன.

சாகுபடி பருவத்திற்கு ஏற்ப அந்தந்த பகுதிகளில் நிலையங்கள் தொடங்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது 5.89 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பருவ நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பொதுக்கூட்டங்களில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்.. எஸ்.டி.பி.ஐ கோரிக்கை

மேலும், தற்போது மழைக்காலம் என்பதால் அன்றன்றைக்கு கொள்முதல் செய்யாததால் மூட்டைகள் தேக்கமடைகின்றன. பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான கிடங்கு மற்றும் கூடார வசதி இல்லாததால் திறந்த வெளியில் இருக்கும் மூட்டைகள் நனைந்து நெல்மணிகள் முளைக்கின்றன. அதேசமயம் ஈரப்பதம் மற்றும் முளைப்புத்திறனை காரணம் காட்டி கொள்முதல் நிலைய பணியாளர்கள் குறைவான விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதாகவும், ஒரு மூட்டைக்கு 40, 50 ரூபாய் கையூட்டு கேட்பதாகவும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து புகார்கள் விவசாயிகளால் எழுப்பட்டு வருகிறது.

லஞ்சம் வாங்கும் காணொலிகள்

அதேசமயம், விவசாயிகளின் மூட்டைகளை உடனுக்குடன் எடை போடாததற்கு காரணம் விவசாயிகள் பெயரிலான சிட்டா அடங்கலை போலியாக பயன்படுத்தி வியாபாரிகள் விவசாயிகளிடமும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் குறைந்த விலைக்கு நெல்களை வாங்கி அவற்றை நேரடி கொள்முதல் நிலைய பணியாளர்களுடன் கூட்டு சேர்ந்து மொத்தமாக வியபாரிகள் முட்டைகளை எடை போட்டு கொள்முதல் செய்து கொள்கிறார்கள். இதற்கு ஆயிரக்கணக்கில் கையூட்டு பெறுவதுமான காணொளிகள், செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவுகின்றன.

முறைகேடுகள் குறித்து விசாரணை

எனவே, பரவலாக நடைபெறுகின்ற இந்த முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தடுப்பதுடனும், விவசாயிகளின் ஆவணங்களை போலியாக வியாபாரிகளுக்காக கொடுக்கின்ற அலுவலர்கள் மீதும், வியாபாரிகளின் நெல்லை மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளின் நெல்லை புறக்கணிக்கும் பணியாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வதை முறையாக, நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கைது செய்யப்படுவாரா விஜய்? மு.க ஸ்டாலின் பதில் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com