திமுகவின் அடிமை கூடாரமாக தமிழக காங்கிரசை மாற்ற முயற்சி.. செல்வ பெருந்தகை மீது நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!

Congress SuryaPrakash Statement: திமுகவின் அடிமை கூடாரமாக தமிழக காங்கிரசை மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மாற்ற முயலுகிறார் என அக்கட்சியின் நிர்வாகி சூரிய பிரகாசம் என்பவர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Published on: January 2, 2026 at 10:14 pm

சென்னை, ஜன 2, 2025; தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான வழக்கறிஞர் ஏ.பி சூரிய பிரகாசம் என்பவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், காங்கிரஸ் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பரபரப்பு அறிக்கையில், ” தி.மு.க. வின் அடிமைகள் கூடாரமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை மாற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தீவிர முயற்சி செய்கிறார். தமிழக அரசின் கடன் சுமை 10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்பதை தி.மு.க அரசே தன்னுடைய 2025 பட்ஜெட் அறிக்கையில் ஒத்து கொண்டுள்ளதை மறந்து பிரவின் சக்கரவர்த்தி அவர்கள் உண்மைக்கு மாறாக தி.மு.க அரசின் மீது பழி போடுவதாக பிரவின் சக்கரவர்த்தி மீது வசைபாடி, வரும் தேர்தலில வெகுஜன தி.மு.க எதிர்ப்பினால் படு தோல்வி அடைய போகும் தி.மு.க வோடு சேர்ந்து காங்கிரசும் படுதோல்வி அடையாமல் இருக்கவும், தமிழக வெற்றி கழகத்திற்கு தமிழக வாக்காளர்களிடம் வீசும் விஜய் ஆதரவு பேரலையை மற்றும் பிரகாசாமான வெற்றி வாய்பை கருத்தில் கொண்டு, த.வெ.க வோடு தேர்தல் கூட்டணி அமைத்தால் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற காங்கிரசாரின் நீண்ட கால கனவை நனவாக்க போராடும் காங்கிரஸ் தொண்டர்களை தற்குறிகள் என்று ஊடகங்களில் வெளிப்படையாக அவமானபடுத்திய செல்வ பெருந்தகை தலைமையின் கீழ் வேலை செய்ய என் சுயமரியாதை இடம் கொடுக்காததால் இன்று முதல் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்துவது மட்டும் அல்லாமல் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலும் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; தஞ்சை தமிழ் பல்கலை இணையதளத்தில் எம்ஜிஆர் படம் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com