Nainar Nagendran MLA: பேச்சு சுதந்திரம் உள்ளது மு க ஸ்டாலின் எது வேண்டுமானாலும் பேசலாம் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Nainar Nagendran MLA: பேச்சு சுதந்திரம் உள்ளது மு க ஸ்டாலின் எது வேண்டுமானாலும் பேசலாம் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Published on: April 18, 2025 at 5:17 pm
சென்னை ஏப்ரல் 18 2025: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், திருவள்ளூரில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், ” டெல்லிக்கு தமிழ்நாடு என்றுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான்” என்றார். மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பாரா? இதற்கான உத்தரவாதத்தை அவரால் வழங்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மு க ஸ்டாலின், ” மாநில உரிமைகளின் அகில இந்திய முகமாக திமுக திகழ்கிறது என்றும் நாங்கள் நிதி கேட்பது அழுகை அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் உரிமை என்றும் பேசினார்.
தொடர்ந்து தாம் அழுது புலம்புபவன் அல்ல எனக் கூறிய முக ஸ்டாலின் யார் காலிலும் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல என்றார். இந்த பேச்சுக்கள் தொடர்பாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ” முதல்வர் மு க ஸ்டாலின் எது வேண்டுமானாலும் சொல்லலாம்; அவருக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது” என பதில் அளித்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியுமா? அமித் ஷா-க்கு மு.க ஸ்டாலின் கேள்வி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com