கோயம்புத்தூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 72 ஸ்பாக்கள் மூடப்பட்டுள்ளன.
கோயம்புத்தூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 72 ஸ்பாக்கள் மூடப்பட்டுள்ளன.
Published on: September 21, 2024 at 11:58 pm
Coimbatore | சென்னைக்கு அடுத்தப் படியாக வளரும் மாவட்டமாக கோயம்புத்தூர் திகழ்கிறது. இங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஸ்பாக்கள் விபசாரத்தில் ஈடுபட்டுவருவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சில ஸ்பாக்களில் மசாஜ் என்ற பெயரில் விபச்சார தொழில் நடப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 72 ஸ்பா சென்டர்களை சீல் வைத்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த ஷிக்கந்தர் பாட்ஷா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் ரவுடி, அரசியல் வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு பெண்களை சப்ளை செய்யும் நபர் ஆவார். இவர் மாதம் ரூ.50 லட்சம் வரை விபசார புரோக்கர் தொழிலில் சம்பாதித்தாக போலீசார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com