Mamallapuram | மகாபலிபுரம் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mamallapuram | மகாபலிபுரம் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: September 1, 2024 at 12:55 pm
Mamallapuram | மகாபலிபுரம் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வரும் 17 மாணவர்கள் வெள்ளிக்கிழமை காலை மகாபலிபுரத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர். மாலையில் கடற்கரையில் குளிக்க சென்ற இவர்களில் பிரகாஷ், கவுதம், ரோஷன் என்ற 3 பேரும் கடலில் மூழ்கினர்.
உடனடியாக அப்பகுதி கிராம மக்கள் மாணவர்களை மீட்க முயன்றனர். இதற்கிடையில் மகாபலிபுரம் போலீசார் மற்றும் மீட்பு குழுவினரும் கடலில் மூழ்கிய மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இரவில், ரோஷனின் (21) சடலம் கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நேற்று (சனிக்கிழமை) காலை ECR பகுதி கடற்கரையோரத்தில் பிரகாஷ் மற்றும் கவுதமின் உடல்களும் மீட்கப்பட்டன.
மகாபலிபுரம் போலீசார் சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க தனிமையில் சந்திக்க தூண்டும் ஓரினச்சேர்க்கை டேட்டிங் ஆப்ஸ்: எச்சரிக்கும் நெல்லை டி.எஸ்.பி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com