உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரின் 4-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரின் 4-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
Published on: November 30, 2024 at 12:06 am
Updated on: November 30, 2024 at 12:09 am
World Chess Championship 2024 | உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. நவம்பர் 25 ஆம் தேதி துவங்கிய இந்த தொடர் டிசம்பர் 3 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையில் நடைபெறுகிறது. இந்த போட்டி 14 சுற்றுகள் கொண்டது. வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு புள்ளியும் டிராவிற்கு அரைப்புள்ளியும் வழங்கப்படும்.
இந்த போட்டியில் முதலில் 7.5 புள்ளிகளை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்குவார். இந்நிலையில் குகேஷ் முதல் சுற்றில் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் இரண்டாவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் மற்றும் டிங் லிரென் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.
3வது சுற்றில் மீண்டும் எழுந்து வந்த குகேஷ் வெற்றி பெற்றார். இதனால் இருவரும் 1.5-1.5 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில், இரு வீரர்களும் துல்லியமாக காய்களை நகர்த்தினர். ஆட்டத்தின் 42வது நகர்வில் டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் மீண்டும் குகேஷ் மற்றும் டிங் லிரென் இருவரும் மீண்டும் 2-2 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் உள்ளனர்.
இதையும் படிங்க ஐ.பி.எல் 2025; RCB புதிய கேப்டன் யார்? 3 வீரர்கள் இடையே போட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com