ODI cricket New Captain: இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ODI cricket New Captain: இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
Published on: October 5, 2025 at 11:30 am
அகமதாபாத், அக்.5, 2025: இந்திய ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு பதிலாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் சனிகிழமை (அக்.4, 2025) அறிவிக்கப்பட்டன.
இது தொடர்பாக அகமதாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கோலி, ரோஹித் சர்மா
இதில், ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலியுடன் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்குப் பிறகு முதல் முறையாக ரோஹித் மற்றும் கோலி இருவரும் போட்டி கிரிக்கெட்டுக்குத் திரும்ப உள்ளனர்.
துணை கேப்டன் யார்?
அக்டோபர் 19 முதல் 25 வரை ஆஸ்திரேலியாவில் இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், அணியின் துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவில் அதிவேக சதம்.. வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com