Mary Kom : என் பணத்தை திருடி விட்டார் என முன்னாள் கணவர் மீது மேரி கோம் குற்றஞ்சாட்டியுள்ளார்
Mary Kom : என் பணத்தை திருடி விட்டார் என முன்னாள் கணவர் மீது மேரி கோம் குற்றஞ்சாட்டியுள்ளார்

Published on: January 14, 2026 at 12:55 pm
புதுடெல்லி, ஜன.14, 2026: மேரி காம் – ஒன்லர் விவாகரத்து காரணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் தற்போது பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மற்றும் அரசியல்வாதி மேரி காம், கடந்த ஆண்டு தனது கணவர் மற்றும் கால்பந்து வீரர் கருங்க் ஒன்கோலர் (ஒன்லர்) உடன் விவாகரத்து செய்ததை உறுதிப்படுத்தினார். அப்போது காரணம் தெளிவாக தெரியவில்லை.
இந்த வாரம், 20 ஆண்டுகள் திருமண வாழ்க்கை மற்றும் நான்கு குழந்தைகளுக்குப் பிறகு, 2023இல் ஒன்லருடன் பிரிவதற்கான காரணத்தை மேரி காம் வெளிப்படுத்தினார். அவர், “என் குத்துச்சண்டை வாழ்க்கையில் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய்களை ஒன்லர் மோசடி செய்தார். என் பெயரில் கடன்கள் எடுத்தார், சொத்துகளை அடமானம் வைத்தார், என் அனுமதி இல்லாமல் தனது பெயருக்கு மாற்றினார்” என குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ஒன்லர், “திருமண வாழ்க்கையில் இருந்தபோது மேரி காம் தொடர்பில் இருந்தார்” என குற்றம்சாட்டி, தனது மீது வந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இதையும் படிங்க ஆஸி மகளிர் கிரிக்கெட் கேப்டன் திடீர் ஓய்வு.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com