டி20 வரலாற்றில் முதல் முறை ; உலக சாதனை படைத்த இந்தியா ; என்ன தெரியுமா?

டி20 வரலாற்றில் இந்திய அணி உலக சாதனை படைத்துள்ளது.

Published on: November 14, 2024 at 7:10 pm

T20 World Record | தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் மூன்றாவது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 107 ரன்கள் அடித்தார்.

அடுத்து விளையாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த ஆட்டத்தையும் சேர்த்து நடைபாண்டில் மட்டும் இந்தியா 8 முறை 200-க்கு அதிகமான ரன்களை அடித்துள்ளது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக முறை 200க்கு அதிகமான ரன்கள் அடித்த முதல் இந்திய அணி என்ற மாபெரும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இதற்கு முன்னர் பர்மிங்காம் பியர்ஸ் (2022), இந்தியா (2023) ஆகிய அணிகள் தலா 7 முறை அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்து இந்திய அணி உலக சாதனையை படைத்துள்ளது.

இதையும் படிங்க இங்கிலாந்து கேப்டனுடன் மோதல்; மேற்கிந்திய வீரருக்கு தடை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com