லண்டன், ஜன.31, 2026: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹாரி புரூக், கடந்த ஆண்டு வெலிங்டனில் நடந்த இரவு நேர சம்பவம் குறித்து தனது முந்தைய விளக்கத்தை திருத்தியுள்ளார். அவர் முன்பு தனியாக இருந்ததாகக் கூறியிருந்தாலும், இப்போது மற்ற வீரர்களும் அப்போது உடன் இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இலங்கையில், பிப்ரவரி 7 அன்று இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள T20 உலகக் கோப்பைக்கான பயிற்சியில் ஹாரி ஈடுபட்ட நிலையில் இந்த விளக்கம் வந்துள்ளது.
முன்னதாக ஹாரி அளித்த விளக்கத்தில், “நான் தனியாக குடிக்கச் சென்றேன். அங்கே நான் மட்டும் இருந்தேன். அப்படி நான் இருக்கக் கூடாது.
ஒரு கிளப்புக்குள் செல்ல முயன்றபோது, பவுன்சர் என்னை அடித்துவிட்டார். நான் அதிகமாக குடித்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. ஆனால், ஒரு இரண்டு கிளாஸ் அதிகமாக குடித்திருப்பேன்” என்றார்.
புதிய விளக்கம்
இந்த நிலையில் தற்போது ஹாரி தனது அணித்தலைவர்கள் உடன் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் தனது முந்தைய கருத்துகள் தவறானவை என்பதை ஏற்றுக்கொண்டு, அணித்தலைவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில்தான் அப்படி கூறியதாக விளக்கமளித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், “வெலிங்டனில் நடந்த சம்பவத்திற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன், அப்போது மற்றவர்கள் இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். என் முந்தைய கருத்துகள் தவறானவை, ஆனால் என் நோக்கம் என் அணித்தலைவர்களை அந்தச் சூழ்நிலைக்குள் இழுக்காமல் பாதுகாப்பதே.
நான் மன்னிப்பு கேட்டுள்ளேன், மேலும் இந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்கிறேன். தலைமை மற்றும் கேப்டன்சியுடன் வரும் வெளிப்புற பொறுப்புகளைப் பற்றி இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதை உணர்கிறேன்.
தனிப்பட்ட முறையிலும், தொழில்முறை முறையிலும் முன்னேறுவதற்கு உறுதியாக இருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாஷிங்டன் சுந்தருக்கு எலும்பு காயம்? 2026 டி-20 உலக கோப்பையில் ஆடுவாரா?
Border 2 worldwide box office collection Report: சன்னி தியோல், வருண் நடிப்பில் பார்டர் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது….
Rohit Shettys Mumbai Home: பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்….
Tamil Nadu person was attacked in Bengaluru: பெங்களூருவில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தனது கண்டனத்தை மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்….
Pramit Jhaveri to Tata Trusts: பிரமித் ஜாவேரி தனது பதவிக்காலம் முடிந்த நிலையில், டாடா டிரஸ்ட்ஸிலிருந்து விலகுகிறார். அவர் 2020 பிப்ரவரி 12 முதல் சர்…
Thol Thirumavalavans remarks about Tamil kings: தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? எனக் கேள்வியெழுப்பியுள்ள டி.டி.வி தினகரன், தொல்….
Thailand Masters quarterfinals: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் இஷராணி பாருவா, தென் கொரியாவின் சங் ஷுவோ யுன்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்