தெலங்கானா ஐகோர்ட் நீதிபதி மரணம்; நீதிபதிகள், வழக்குரைஞர்கள் இரங்கல்!

Justice Maturi Girija Priyadarsini passed away: தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி மாதுரி கிரிஜா பிரியதர்சினி காலமானார். அவருக்கு வயது 61.

Published on: May 5, 2025 at 10:54 am

ஹைதராபாத், மே 5 2025: தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் பதவிக்கால நீதிபதி மாதுரி கிரிஜா பிரியதர்சினி ஞாயிற்றுக்கிழமை (மே 4 2025) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 61.
நீதிபதி மாதுரி கிரிஜா பிரியதர்சினி உடல் ஹபீஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை (மே 5 2025) ஜூபிலி ஹில்ஸில் உள்ள மகாபிரஸ்தானத்தில் நடைபெறுகிறது.

இரங்கல்

நீதிபதி பிரியதர்சினியின் மறைவுக்கு தற்காலிக தலைமை நீதிபதி சுஜோய் பால், உயர் நீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நீதிபதி மாதுரி கிரிஜா பிரியதர்சினி, 2022 இல் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றார். அவர் பதவி மூப்பில் 16 வது இடத்தில் இருந்தார். அடுத்த ஆண்டு ஓய்வு பெறவிருந்தார்.

இரு மகன்கள்

நீதிபதி பிரியதர்ஷினி டாக்டர் விஜய் குமார் தம்பதிக்கு நிகில் மற்றும் அகில் என இரு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆம் ஆத்மி பிரமுகர் மகள் கனடாவில் மரணம்; கடற்கரையில் பிணமாக கிடந்தார்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com