Maneka Gandhi: உச்ச நீதிமன்றத்தின், தெருநாய்கள் தொடர்பான உத்தரவு குறித்து விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Maneka Gandhi: உச்ச நீதிமன்றத்தின், தெருநாய்கள் தொடர்பான உத்தரவு குறித்து விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Published on: January 20, 2026 at 8:53 pm
புதுடெல்லி, ஜன.20, 2026: “தெருநாய் பிரச்சினை தொடர்பான உத்தரவுகளை முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான மேனகா காந்தி, விமர்சித்தது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா தலைமையிலான அமர்வு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “மேனகா காந்தி யாரையும் நினைக்காமல், அனைவரையும் குற்றம் சாட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இது அவமதிப்பு ஆகும். எனினும், நீதிமன்றத்தின் பெருந்தன்மை காரணமாக அவமதிப்பு வழக்கு தொடங்கப்படவில்லை” எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாஜக புதிய தலைவர் நிதின் நபீன் எனது பாஸ்.. பிரதமர் நரேந்திர மோடி!
முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அமைச்சராக இருந்தபோது தெருநாய் பிரச்சினையை தீர்க்க மேனகா காந்தி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என அவரது வழக்குரைஞர் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள், மேலும், “அஜ்மல் கசாப் கூட நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை; ஆனால் உங்கள் வாடிக்கையாளர் செய்துள்ளார்” என்று நீதிபதி நாத் கடுமையாகக் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், உச்ச நீதிமன்றம், கடந்த ஐந்து ஆண்டுகளாக தெருநாய் தொடர்பான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் கவலைக்குரியதாக சுட்டிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண்ணுடன் நெருக்கம்.. வீடியோவில் சிக்கிய கர்நாடக போலீஸ் அதிகாரி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com