Chief Justice of India BR Gavai in Supreme Court : நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் தன் மீது ஷூ வீச முயற்சி நடந்த சம்பவம் குறித்து மேலும் எடுத்துச் செல்ல விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Chief Justice of India BR Gavai in Supreme Court : நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் தன் மீது ஷூ வீச முயற்சி நடந்த சம்பவம் குறித்து மேலும் எடுத்துச் செல்ல விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Published on: October 10, 2025 at 11:51 am
புதுடெல்லி, அக்.10, 2025: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் மீது ஷூ வீச முயற்சி நடந்தது. இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கடந்துள்ளது இந்நிலையில், இந்த விஷயத்தை மேலும் எடுத்துச் செல்ல விரும்பவில்லை; அதை மறந்துவிட்டேன் என்று பி.ஆர் கவாய் வியாழக்கிழமை (அக்.9, 2025) கூறினார்.
ஷூ வீச முயற்சி
இந்த வார திங்கட்கிழமை (அக்.6. 2025) காலை தலைமை நீதிபதி அமர்வு முன் வழக்குகள் பரிசீலிக்கப்பட்டது. அப்போது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் திடீரென மேடையை நெருங்கி தனது காலணியை கழற்ற முயன்றார்.
பின்னர் பாதுகாப்புப் பணியாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது, “சனாதன் கா அப்மான் நஹி சஹேங்கே (சனாதனுக்கு எந்த அவமானத்தையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்)” என்றார்.
இந்த சலசலப்பு மற்றும் குழப்பத்துக்கு செவி சாய்க்காமல் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய், “இதனால் யாரும் திசைதிருப்பப்பட வேண்டாம். நான் திசைதிருப்பப்படவில்லை. இந்த விஷயங்கள் என்னைப் பாதிக்காது” என்றார்.
மேலும், தலைமை நீதிபதி கவாய் எந்த குற்றச்சாட்டுகளையும் சுமத்த மறுத்து, இந்த சம்பவத்தை புறக்கணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கிஷோர் மீது நடவடிக்கை
இதற்கிடையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கூச்சல் அதிகரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (SCBA) வியாழக்கிழமை 71 வயதான கிஷோரின் தற்காலிக உறுப்பினர் பதவியை நீக்கியது.
மேலும், “கிஷோரின் உறுப்பினர் அட்டையை பறிமுதல் செய்யவும், உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு அவர் செல்லும் வழியை ரத்து செய்யவும் பார் கவுன்சில் சங்கம் உத்தரவிட்டது. தொடர்ந்து, இந்த முடிவு வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளிடையே சுற்றறிக்கைக்கு விடப்படும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர்.. உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com