சிவகங்கை ரயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தத்துடன் பல சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சிவகங்கை ரயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தத்துடன் பல சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Published on: December 19, 2024 at 8:18 pm
Updated on: December 20, 2024 at 11:14 am
Southern Railway | ஹூப்பள்ளி – ராமேஸ்வரம் சிறப்பு ரயில்(ரயில் எண் 07355) சனிக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு ஹூப்பள்ளியிலிருந்து புறப்பட்டு ஜனவரி 4 முதல் 28, 2025 வரை இயக்கம் நீட்டிக்கப்படும்.
ராமேஸ்வரம் – ஹூப்பள்ளி (ரயில் எண் 07356) சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு ஜனவரி 5 முதல் 29, 2025 வரை இயக்கப்படும்.
இந்த ரயில்களுக்கு சிவகங்கை ரயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்களின் நேரம் மற்றும் அமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தென்னக ரயில்வே முனையிலிருந்து திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com