Former Chhattisgarh CM Bhupesh Baghel in CD case: சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், செக்ஸ் சி.டி வழக்கில் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளில் இருந்தும் ராய்ப்பூர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Former Chhattisgarh CM Bhupesh Baghel in CD case: சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், செக்ஸ் சி.டி வழக்கில் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளில் இருந்தும் ராய்ப்பூர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Published on: March 5, 2025 at 10:40 am
ராய்ப்பூர் (சத்தீஸ்கர்) மார்ச் 5 2025: சத்தீஸ்கர் மாநிலத்தில், 2017ஆம் ஆண்டு செக்ஸ் சி.டி. வழக்கில் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் மற்றும் பிரபல பத்திரிகையாளர் வினோத் வர்மா உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையில், பத்திரிகையாளர் வினோத் வர்மா, பின்னாள்களில் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேலிடம் ஆலோசகராக பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் பூபேஷ் பாகேல் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
பூபேஷ் பாகேல் மீதான வழக்குகள்
செக்ஸ் சிடி விவகாரம் மாநிலத்தில் புயலை கிளப்பிய நிலையில், அப்போதைய முதலமைச்சர் ராமன் சிங் வழக்கை, சி.பி.ஐ வசம் ஒப்படைத்தார். முன்னதாக பூபேஷ் பாகேல் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120 பி (குற்றச் சதி), பிரிவு 469 (நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதற்கான போலிகளை உருவாக்குதல்), பிரிவு 471 (போலி ஆவணம்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 ஏ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க : நான் கஞ்சா புகைப்பேன்.. சர்ச்சையில் சிக்கிய ஐஐடி பாபா.. வழக்குப்பதிவு!
இந்த வழக்கின் விசாரணை, ராய்ப்பூரில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த ராய்ப்பூர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், வழக்கின் அனைத்து தரப்பு குற்றச்சாட்டில் இருந்தும் பூபேஷ் பாகேலை விடுவித்துள்ளது.
சத்யமேவ ஜெயதே
இந்த உத்தரவை தொடர்ந்து, சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் சத்யமேவ ஜெயதே எனத் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசியல் பரபரப்பை கிளப்பிய இந்த வழக்கில் பூபேஷ் பாகேல் விடுவிக்கப்பட்டது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க : MUDA scam: சித்த ராமையா வழக்கில் சி.பி.ஐ விசாரணை.. நீதிமன்றத்தில் முறையிட்ட சமூக ஆர்வலர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com