Patna High Court: பிரதமர் மோடியின் தாயாரின் செயற்கை நுண்ணறிவு வீடியோவை சமூக ஊடகங்களிலிருந்து நீக்குமாறு காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Patna High Court: பிரதமர் மோடியின் தாயாரின் செயற்கை நுண்ணறிவு வீடியோவை சமூக ஊடகங்களிலிருந்து நீக்குமாறு காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Published on: September 17, 2025 at 12:49 pm
பாட்னா, செப்.17, 2025: பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய காணொளியை நீக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு பாட்னா உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பொறுப்பு தலைமை நீதிபதி பி.பி. பஜந்தாரி பிறப்பித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பீகார் பிரிவு, பிரதமர் நரேந்திர மோடி தனது மறைந்த தாயார் ஹீராபென் மோடியைப் பற்றிய ஆட்சேபத்துக்குரிய ஏ.ஐ. வீடியோவை பகிர்ந்திருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், பாரதிய ஜனதா கட்சி தலைவர்களும் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில், ஆட்சேபத்துக்குரிய ஏ.ஐ. வீடியோவுக்கு எதிராக பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், காங்கிரஸ் கட்சி சமூக வலைதளங்களில் இருந்து வீடியோவை நீக்க உத்தரவிட்டுள்ளது.
இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை நடத்திவருகிறார். இந்நிலையில், பிரதமரின் தாயார் அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வக்ஃப் திருத்தச் சட்டம்.. உச்ச நீதிமன்றம் இறக்கிய பேரிடி.. எதெற்கெல்லாம் தடை தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com