Pahalgam terror attack: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஒற்றுமையான நடவடிக்கை தேவை என ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது.
Pahalgam terror attack: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஒற்றுமையான நடவடிக்கை தேவை என ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது.
Published on: April 23, 2025 at 5:32 pm
புதுடெல்லி, ஏப்.23 2025: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, தற்போது அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அனைவரும் ஒற்றுமையுடன் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதாவது, ஆர்.எஸ்.எஸ். அகில பாரதிய பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அனைவரும் ஒன்று சேருமாறு வலியுறுத்தினார். இது குறித்த ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரில் நேற்று (ஏப்.22 2025) நடந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
ஏனெனில் இது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் பிரச்சினை. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது முறையான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். அந்த திசையில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பல்ஹாம் தாக்குதல் பயங்கரவாதிகள் மீது’துல்லிய தாக்குதல் நடத்தப்படும்’: ராஜ்நாத் சிங்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com