Union Budget 2025 | இந்திய நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இது தொடர்ச்சியாக இவரின் எட்டாவது பட்ஜெட் ஆகும்.
Union Budget 2025 | இந்திய நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இது தொடர்ச்சியாக இவரின் எட்டாவது பட்ஜெட் ஆகும்.
Published on: February 1, 2025 at 9:50 am
2025- 26 ஆம் ஆண்டுக்கான இந்திய நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று ( பிப்ரவரி 1 2025) தாக்கல் செய்கிறார். இது இவரின் எட்டாவது தொடர்ச்சியான பட்ஜெட் தாக்கல் ஆகும். இதற்கு முன்பு பா சிதம்பரம் தொடர்ந்து ஏழு முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இது அவரின் 3.0 அரசின் முதல் பட்ஜெட் ஆகும். இதனால் இந்த பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக எஸ்.பி.ஐ.,யின் ஆய்வறிக்கை வெளியானது. அந்த ஆய்வறிக்கையில் பல்வேறு விஷயங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. சேமிப்பு கணக்குகளின் வட்டியை உயர்த்துதல், சிறுசேமிப்பு கணக்குகளின் மீது கவனம், சம்பளதாரர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு உள்ளான வருவாய்க்கு 15 சதவீதம் மட்டுமே வரி விதித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இதில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் பொருளாதாரம் மிக மந்தமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்க டாலர் விவகாரத்தில் நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு இல்லை. கடந்த ஆண்டை விட குறைவான வளர்ச்சியே பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் தனிநபர் வருமானமும் சரிவை சந்தித்து வருகிறது என தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை தாக்கல் செய்தார்.
இந்தப் பொருளாதார அறிக்கையில் நாட்டின் ஜி.டி.பி ( மொத்த உள்நாட்டு வருவாய்) 6.8 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com