வீட்டில் பிணமாக கிடந்த கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்: மார்க்சிஸ்ட் திவ்யா மிரட்டல் காரணமா?

Kerala | Kannur | கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நவீன் பாபு வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் பிரமுகர் திவ்யா மீது புகார் எழுந்துள்ளது.

Published on: October 17, 2024 at 12:28 pm

Kerala | Kannur | சி.பி.ஐ (மார்க்சிஸ்ட்) தலைவரும் கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான PP திவ்யா ஒரு பொது நிகழ்ச்சியில் கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நவீன் பாபு பற்றி விமர்சித்த ஒரு நாள் கழித்து, அவர் தனது வீட்டில் இறந்து கிடந்தார். பாபுவின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பத்தனம்திட்டாவில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக அவர் புதிய பொறுப்பை ஏற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இது நடந்துள்ளது.

மார்க்சிஸ்ட் திவ்யா பேச்சு

முன்னதாக, கண்ணூரில் திங்கள்கிழமை நடந்த பாபுவின் பிரியாவிடை நிகழ்வின் போது, ​​மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் பாண்டன் அவரை கவுரவித்தார். இந்த விழாவில் திவ்யா கலந்துகொண்டு, பாபுவின் பதவிக்காலம் குறித்த தனது விரக்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

அப்போது திவ்யா, “வேறு மாவட்டத்திற்குச் செல்லும் கூடுதல் மாஜிஸ்திரேட்டுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து, “தொழில்முனைவோர் (எரிபொருள் விற்பனை நிலைய விண்ணப்பதாரர்) பலமுறை என்னிடம் வந்து பிரச்னைகளை கூறுவார்கள். ஆனால் மாஜிஸ்திரேட் தடை இல்லா சான்றிதழ் வழங்கவில்லை. ஜிக்ஜாக் சாலையில் பிரச்னைகள் இருப்பதாக கூறினார்” என்றார்.

காங்கிரஸ் வலியுறுத்தல்

கண்ணூரில் உள்ள சி.பி.எம். திவ்யா சிபிஐ(எம்) மகளிர் பிரிவான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திவ்யா மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாபுவின் மனைவி மஞ்சுஷா, பத்தனம்திட்டா மாவட்டம், கொன்னியில் தாசில்தாராகப் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

மேற்காசிய பதற்றம்.. 24 மணி நேர கண்காணிப்பு.. இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை.. பிரதமர் நரேந்திர மோடி! Narendra Modi

மேற்காசிய பதற்றம்.. 24 மணி நேர கண்காணிப்பு.. இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை.. பிரதமர்

Narendra Modi: மேற்காசிய போர் சூழலில், இந்தியர்களின் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்துகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்….

புதிய முகங்களுக்கு வாய்ப்பு.. 9 எம்எல்ஏக்கள் கல்தா.. உச்சகட்ட பரபரப்பில் கேரளம்! Kerala Polls 2026

புதிய முகங்களுக்கு வாய்ப்பு.. 9 எம்எல்ஏக்கள் கல்தா.. உச்சகட்ட பரபரப்பில் கேரளம்!

Keralam Assembly Election 2026: கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரம் காட்டி வருகிறது; 9 எம்எல்ஏக்களுக்கு…

மனைவியிடம் மன்னிப்பு கேட்ட கேரள அமைச்சர்.. ராஜினாமா யூகங்களுக்கு முற்றுப்புள்ளி!

மனைவியிடம் மன்னிப்பு கேட்ட கேரள அமைச்சர்.. ராஜினாமா யூகங்களுக்கு முற்றுப்புள்ளி!

Ganesh Kumar: கேரளா போக்குவரத்து அமைச்சர் கே பி கணேஷ் குமார் மீது அவரது மனைவி துரோக குற்றம் சாட்டியதை தொடர்ந்து அவரது மனைவி பிந்து மேனனை…

கேரளத்தில் சாலை விபத்து மரணங்கள் குறைவு.. முழு விவரம் Kerala

கேரளத்தில் சாலை விபத்து மரணங்கள் குறைவு.. முழு விவரம்

Kerala: கேரளத்தில் 2025-ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் அதிகரித்தபோதும், சாலை விபத்து மரணங்கள் குறைந்தன….

கேரளா கேரளம் என பெயர் திருத்தம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்! Keralas Renaming to Keralam

கேரளா கேரளம் என பெயர் திருத்தம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Keralam: கேரளாவின் பெயர் கேரளம் என மாற்றப்பட்ட நிலையில் அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com