வீட்டில் பிணமாக கிடந்த கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்: மார்க்சிஸ்ட் திவ்யா மிரட்டல் காரணமா?

Kerala | Kannur | கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நவீன் பாபு வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் பிரமுகர் திவ்யா மீது புகார் எழுந்துள்ளது.

Published on: October 17, 2024 at 12:28 pm

Kerala | Kannur | சி.பி.ஐ (மார்க்சிஸ்ட்) தலைவரும் கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான PP திவ்யா ஒரு பொது நிகழ்ச்சியில் கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நவீன் பாபு பற்றி விமர்சித்த ஒரு நாள் கழித்து, அவர் தனது வீட்டில் இறந்து கிடந்தார். பாபுவின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பத்தனம்திட்டாவில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக அவர் புதிய பொறுப்பை ஏற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இது நடந்துள்ளது.

மார்க்சிஸ்ட் திவ்யா பேச்சு

முன்னதாக, கண்ணூரில் திங்கள்கிழமை நடந்த பாபுவின் பிரியாவிடை நிகழ்வின் போது, ​​மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் பாண்டன் அவரை கவுரவித்தார். இந்த விழாவில் திவ்யா கலந்துகொண்டு, பாபுவின் பதவிக்காலம் குறித்த தனது விரக்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

அப்போது திவ்யா, “வேறு மாவட்டத்திற்குச் செல்லும் கூடுதல் மாஜிஸ்திரேட்டுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து, “தொழில்முனைவோர் (எரிபொருள் விற்பனை நிலைய விண்ணப்பதாரர்) பலமுறை என்னிடம் வந்து பிரச்னைகளை கூறுவார்கள். ஆனால் மாஜிஸ்திரேட் தடை இல்லா சான்றிதழ் வழங்கவில்லை. ஜிக்ஜாக் சாலையில் பிரச்னைகள் இருப்பதாக கூறினார்” என்றார்.

காங்கிரஸ் வலியுறுத்தல்

கண்ணூரில் உள்ள சி.பி.எம். திவ்யா சிபிஐ(எம்) மகளிர் பிரிவான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திவ்யா மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாபுவின் மனைவி மஞ்சுஷா, பத்தனம்திட்டா மாவட்டம், கொன்னியில் தாசில்தாராகப் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

கேரளத்தில் கூட்டணி ஆட்சி.. முதல்வர் வி.டி சதீசன், முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 அமைச்சர்கள்! Kerala’s New CM

கேரளத்தில் கூட்டணி ஆட்சி.. முதல்வர் வி.டி சதீசன், முஸ்லீம் லீக் கட்சிக்கு 5

Kerala’s New CM : கேரளத்தின் முதல் அமைச்சராக காங்கிரஸின் வி.டி. சதீசன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரின் அமைச்சரவையில், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 5 அமைச்சர்கள்…

கேரளத்தில் நாகரீக அரசியல்.. பினராய் விஜயன் வீடு தேடிச் சென்ற வி.டி சதீசன்! Satheesan Visits Vijayan

கேரளத்தில் நாகரீக அரசியல்.. பினராய் விஜயன் வீடு தேடிச் சென்ற வி.டி சதீசன்!

Satheesan Visits Vijayan in Thiruvananthapuram : கேரளத்தின் புதிய முதலமைச்சராக காங்கிரஸின் வி.டி சதீசன் தேர்வாகியுள்ளார்; இந்த நிலையில், அவர் பினராய் விஜயன் வீடு தேடிச்…

ஒரு வாரம் முன்பே, கேரளத்தில் தென்மேற்கு பருவமழை.. எப்போது தெரியுமா? Kerala weather

ஒரு வாரம் முன்பே, கேரளத்தில் தென்மேற்கு பருவமழை.. எப்போது தெரியுமா?

Kerala weather: கேரளத்தில் தென்மேற்கு பருவமழை மே 26ஆம் தேதி தொடங்குகிறது; இதனால் வெப்பம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது….

கேரளத்தில் யார் முதலமைச்சர்? வெற்றியை களங்கப்படுத்துவதா? ராகுல் காந்தி ஆவேசம்! Congress Delays Kerala CM Decision

கேரளத்தில் யார் முதலமைச்சர்? வெற்றியை களங்கப்படுத்துவதா? ராகுல் காந்தி ஆவேசம்!

Kerala CM Decision : கேரளத்தில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது….

கேரளத்தில் பா.ஜ.க மாவட்ட நிர்வாகி குத்திக் கொலை.. கொலையாளி கைது.. போலீசார் விசாரணை! Kannur BJP Leader Geethamma murder case

கேரளத்தில் பா.ஜ.க மாவட்ட நிர்வாகி குத்திக் கொலை.. கொலையாளி கைது.. போலீசார் விசாரணை!

Kannur BJP Leader Geethamma murder case : கண்ணூரைச் சேர்ந்த பாஜக மகளிர் மோர்ச்சா தலைவி கீதம்மா, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தன் மகன் கிறிஸ்டி…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com