ஞானவாபி மசூதி: சிவலிங்கமா? நீரூற்றா? அகழாய்வு நடத்த இந்துக்கள் மனு!

Gyanvapi mosque case | ஞானவாபி மசூதி விவகாரத்தில் அடுத்த விசாரணையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Published on: September 11, 2024 at 7:41 pm

Gyanvapi mosque case | உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வழக்கில் இந்து தரப்பில் புதன்கிழமை வாரணாசி நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “வளாகத்தில் ஆழமான அகழாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “அந்த இடத்தைச் சுற்றியுள்ள வரலாற்று உரிமைகோரல்களை ஆய்வு செய்ய முயல்கிறது.

இது குறித்து இந்து தரப்பு வழக்கறிஞரின் கூற்றுப்படி, “மசூதியின் குவிமாடத்திற்கு அடியில் அசல் ஜோதிர்லிங்கம் இருப்பதாக இந்து தரப்பு வாதிடுகிறது. மேலும் இந்து புனித நீர் தீர்த்தம் இருப்பதாகவும் இந்து தரப்பு வாதிடுகிறது.
இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் சிவில் நீதிபதி ஜுகல் ஷம்பு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, செப்.18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இந்த வழக்கில் இஸ்லாமிய தரப்பு எதிர் வாதங்களை முன்வைக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், முஸ்லீம் தரப்பு ‘வுசுகானா’ என்று அழைக்கும் ஞானோதய் தீர்த்தத்தில் இருந்து கிடைத்தது சிவலிங்கம் அல்ல; அது நீரூற்று என வாதிடுகிறது.

இதையும் படிங்க :  பெண்களுக்கு ரூ.3 ஆயிரம், ரேஷனில் 11 கிலோ தானியம்: வாக்குறுதிகளை அள்ளிவீசிய காங்கிரஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com