Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.
இதையும் படிங்க
Haryana land deal case: ஹரியானா நில பேர வழக்கில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை நடத்தியது. ராபர்ட் வதேரா, ராகுல் காந்தியின்…
Next Chief Justice of India: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்குப் பிறகு இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ணா கவாய்…
Gurugram land deal: குருகிராம் நில ஒப்பந்தத்தில் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது, ‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்….
Tahawwur Rana: பயங்கரவாதி தஹாவ்வூர் ராணா இந்தியா கொண்டுவரப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்….
DoPT: பெண் அரசு ஊழியர்கள் இப்போது குடும்ப ஓய்வூதியத்திற்கு கணவருக்கு பதிலாக குழந்தைகளை பரிந்துரைக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்