ஹரியானாவில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை: முதல்வர் அறிவிப்பு

Haryana | ஹரியானா அரசு மருத்துமனைகளில் இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Published on: October 18, 2024 at 6:21 pm

Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.

டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.

இதையும் படிங்க

1,500 விமானங்கள் இன்று இயக்கப்படும்.. இண்டிகோ அறிவிப்பு IndiGo

1,500 விமானங்கள் இன்று இயக்கப்படும்.. இண்டிகோ அறிவிப்பு

IndiGo: 95 சதவீத சேவை மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டது; இன்று 1500 விமானங்கள் இயக்கப்படும் என இண்டிகோ தெரிவித்துள்ளது….

ராஜினாமா.. ஹரியானா காங்கிரஸில் சலசலப்பு.. யார் இந்த சம்பத் சிங்? Sampath Singh resigned

ராஜினாமா.. ஹரியானா காங்கிரஸில் சலசலப்பு.. யார் இந்த சம்பத் சிங்?

Sampath Singh resigned: ஹரியானா மாநில காங்கிரஸ் மூத்தத் தலைவர் சம்பத் சிங், பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார்….

தொழில்நுட்ப முன்னோடி நாடு இந்தியா.. பிரதமர் நரேந்திர மோடி Emerging Science & Technology Innovation Conclave 2025

தொழில்நுட்ப முன்னோடி நாடு இந்தியா.. பிரதமர் நரேந்திர மோடி

Emerging Science & Technology Innovation Conclave 2025: இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னோடி நாடு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்….

பெண்ணின் மார்பகத்தை தொட்ட டெலிவரி பாய்? ஷாக்கிங் வீடியோ! New delhi

பெண்ணின் மார்பகத்தை தொட்ட டெலிவரி பாய்? ஷாக்கிங் வீடியோ!

New delhi: பிளிங்கிட் டெலிவரி பாய் ஒருவர் பெண்ணின் மார்பகத்தை தொட்டர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது….

உலகின் ஸ்திரத்தன்மை.. காஸா அமைதி திட்டம்.. மோடி-ஸ்டார்மர் பேச்சு Narendra Modi

உலகின் ஸ்திரத்தன்மை.. காஸா அமைதி திட்டம்.. மோடி-ஸ்டார்மர் பேச்சு

Narendra Modi : ‘உலக ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மை முக்கியமானது’ என்று ஸ்டார்மருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் மோடி கூறினார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com