Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.
இதையும் படிங்க
Delhi Police facial recognition; ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில், முகம் அடையாளம் காணும் கேமரா தொழில்நுட்பத்தின் மூலம், குற்றவாளிகள் சிலர் கண்டறியப்பட்டுள்ளனர்….
Delhi solar panel scheme: டெல்லி அரசு, 400 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு இலவச சோலார் பேனல்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், மின்சாரச்…
GOBARdhan Scheme: ரூ.23,731 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில் ‘கோபர்தன்’ மத்தியத் துறை திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG)…
Pink Ribbon Global Launch : புதுடெல்லியில் உள்ள இந்திய கான்ஸ்டிடியூஷன் கிளப்பில், இந்தியா டர்ன்ஸ் பிங்க் மற்றும் பிங்க் ரிப்பன் இன்டர்நேஷனல் இணைந்து “பிங்க்…
Delhi University PG ; ஓராண்டு முதுகலை படிப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்