Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.
இதையும் படிங்க
FCRA Amendment Bill : வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா தொடர்பாக அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது. இந்தியாவின் சட்டமன்ற நடவடிக்கைகள்…
DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத DA உயர்வு வரவுள்ளன; இதனால், மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் சம்பளத்தில் கூடுதல் நிவாரணம் பெறுவார்கள்….
TN farmers forced off train : டெல்லிக்கு போராட சென்ற தமிழக விவசாயிகள் போலீசாரால் நாக்பூரில் இருந்து சென்னைக்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்….
Bhumi Pednekar: “பாலினம் மற்றும் கல்வி பிரச்னையை கவனத்துடன் கையாள வேண்டும்” என நடிகை பூமி பெட்னேகர் தெரிவித்துள்ளார்….
MP Ravindran Meets Fisheries Secretary: இந்திய மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி, ஐ.ஏ.எஸ் அவர்களை, பாராளுமன்ற மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் பேராசிரியர் J.கான்ஸ்டண்டைன்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்