Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.
இதையும் படிங்க
Mineral Taxes: மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ள ‘சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026’ தாக்கல் செய்யப்பட்டுள்ளது….
PM meets CWG winners: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 13 தங்கம் உட்பட 39 பதக்கங்களை வென்று 4-வது இடம் பிடித்த…
Delhi High Court : டெல்லியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் கைதான இளம் பெண்ணுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது….
FCRA Bill : வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? எஃப்.சி.ஆர்.ஏ, விவகாரத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாஜகவின் மசோதாவை எதிர்ப்பது ஏன்?…
FCRA Amendment Bill : வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா தொடர்பாக அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது. இந்தியாவின் சட்டமன்ற நடவடிக்கைகள்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்