Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.
இதையும் படிங்க
Asian Development Bank : ஆசிய வளர்ச்சி வங்கி, நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6.5%-லிருந்து 6.9%-ஆக உயர்த்தியுள்ளது….
NewDelhi : இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், சாந்தி மசோதாவை இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று குறிப்பிட்டார்….
Nitish Kumar : மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு திரும்பி உள்ளார், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நிதிஷ்குமார்….
Kharif 2026 : 2026-ஆம் ஆண்டு கரீஃப் பருவத்திற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு, ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது….
CEC Gyanesh Kumar Impeachment Motion: ராஜ்யசபா தலைவர் மற்றும் லோக்சபா சபாநாயகர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க தீர்மான…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்