Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.
இதையும் படிங்க
Padma Awards Ceremony : குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகளை வழங்குகிறார்….
WPU Goa : உயர்கல்வித்துறையில் புதிய அணுகுமுறைகள் அவசியமாகின்றன; இதனை முன்னிட்டு, சர்வதேச அமைதி பல்கலைக்கழகம் (WPU) கோவா, ‘பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் கல்வி’ மாதிரியை வலியுறுத்தியுள்ளது….
CJP Protest : ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) சார்பில் மீண்டும் போராட்டம் நடத்தப்படவுள்ள நிலையில், டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன….
Window incident on Air India : ஏர் இந்தியா விமானத்தின் ஜன்னலை உடைத்த பயணியால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது….
TVK : இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காதது ஏன்?…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்