Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.
இதையும் படிங்க
Delhi Rain and Thunderstorms : டெல்லியில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது….
Rajnath Singh on Operation Sindoor : தீர்க்கமான நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அரசின் அசைக்க முடியாத உறுதியை ‘ஆபரேஷன் சிந்தூர்’ பிரதிபலிக்கிறது என…
Nine dead in Delhi Vivek Vihar fire : டெல்லி நகரின் ஷாஹ்தரா பகுதியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் இன்று (மே 3, 2026)…
Man Dies in Gurugram Flat : குருகிராமில் உள்ள குடியிருப்பில் வருங்காலத் துணையை அழைத்த நபர் உயிரிழந்துள்ளார்; ‘பாலியல் செயல்திறனை அதிகரிக்கும்’ மருந்தை அளவுக்கு அதிகமாக…
Asian Development Bank : ஆசிய வளர்ச்சி வங்கி, நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6.5%-லிருந்து 6.9%-ஆக உயர்த்தியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்