Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.
இதையும் படிங்க
Flight suspension to UAE : மேற்கு ஆசியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன….
Milk production in India: பால் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது….
Uday Bhanu Chib: பாரத் மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் பிரமுகருக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது….
Delhi SWAT cop Kajal Chaudhary Dead: டெல்லி ஸ்வாடு கமாண்டர் பெண் போலீஸ் காஜல் சௌதாரி மரணத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன….
Himachal CM Sukhu : ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுகு ஏன் ஆப்பிள் இறக்குமதிக்கு 100% சுங்கவரி கோரினார்? விளக்கமாக பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்