Nirmala Sitaraman | தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஜனஅதிகார சங்கர்ஷ பரிஷத்தின் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர் ஐயர் என்பவர் தனிப்பட்ட புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆதர்ஷ் என்பவர் தனது புகாரில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.8 ஆயிரம் கோடிகள் வரை நிர்மலா சீதாராமன் பயனடைந்துள்ளார் எனத் தெரிவித்து இருந்தார். இந்தப் புகார் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கடந்த மார்ச் மாதமே அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, நில மோசடி புகாரில் கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் மீது அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Rajya Sabha Elections 2026: மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸின் 6 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்….
Assembly Election 2026: திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்ட கடந்த காலங்களில் நாங்கள் விட்டுக் கொடுத்தோம் என்பதை கூறிய காங்கிரஸ் கூட்டணி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுக…
Uday Bhanu Chib: பாரத் மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் பிரமுகருக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது….
Rahul Gandhi’s soldiers protest: இந்தியா AI இம்பாக்ட் சம்மிட் 2026-இல், இந்திய யூத் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து சட்டை கழற்றி போராட்டம்…
Mani Shankar Aiyar: “யாரும் காங்கிரஸ் கட்சி பெயரில் ஓட்டு போடப் போவதில்லை; நமக்கு முதல்வராக மு.க.ஸ்டாலின் வேண்டுமா, பழனிசாமி வேண்டுமா என்ற அடிப்படையில்தான் மக்கள் ஓட்டுப்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்