Nirmala Sitaraman | தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஜனஅதிகார சங்கர்ஷ பரிஷத்தின் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர் ஐயர் என்பவர் தனிப்பட்ட புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆதர்ஷ் என்பவர் தனது புகாரில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.8 ஆயிரம் கோடிகள் வரை நிர்மலா சீதாராமன் பயனடைந்துள்ளார் எனத் தெரிவித்து இருந்தார். இந்தப் புகார் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கடந்த மார்ச் மாதமே அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, நில மோசடி புகாரில் கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் மீது அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Meenakshi Natarajan’s nomination : மீனாட்சி நடராஜன் மாநிலங்களவை வேட்புமனு நிராகரிக்கப்பட்டது; இது கொடூரமானது என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….
INDIA bloc meeting: காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதனை தி.மு.க. மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன….
Shivakumar on Mekedatu: தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் செய்வார்கள் எனத் தெரிவித்துள்ளார் கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்….
Telangana Lawyer’s Murder : தெலங்கானாவில் வழக்கறிஞர் கொலை வழக்கில், மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்….
New Karnataka CM : கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே சிவக்குமார் தேர்வாகியுள்ளார் என அமைச்சர் ஹெச்.கே பாட்டீல் கூறினார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்