Nirmala Sitaraman | தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஜனஅதிகார சங்கர்ஷ பரிஷத்தின் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர் ஐயர் என்பவர் தனிப்பட்ட புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆதர்ஷ் என்பவர் தனது புகாரில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.8 ஆயிரம் கோடிகள் வரை நிர்மலா சீதாராமன் பயனடைந்துள்ளார் எனத் தெரிவித்து இருந்தார். இந்தப் புகார் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கடந்த மார்ச் மாதமே அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, நில மோசடி புகாரில் கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் மீது அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
DMK Alliance Meet in Puducherry: புதுச்சேரியில் திமுக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை; அதே நேரம் மற்ற கூட்டணி கட்சிகளான…
Parliament Turmoil: மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்….
Congress: 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்பதில் உறுதியாக உள்ள திமுக, அக்கட்சியுடன் கூட்டணியை இறுதிப் படுத்தி உள்ளதாக தகவல்கள்…
RS Bharathi : பொதுவெளியில் கூட்டணி கட்சியினர் குறித்து விவாதிப்பதை தி.மு.க.வினர் தவிர்க்க வேண்டும் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்….
Mohd Moquim : ஒடிசா மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ முகம்மது மோக்கீம் காங்கிரஸ் கட்சியில் இருருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்