BMW car hits motorcycle in delhi: டெல்லியில் பெண் ஓட்டி வந்த பி.எம்.டபிள்யூ கார் மோதி நிதியமைச்சக அதிகாரி உயிரிழந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
BMW car hits motorcycle in delhi: டெல்லியில் பெண் ஓட்டி வந்த பி.எம்.டபிள்யூ கார் மோதி நிதியமைச்சக அதிகாரி உயிரிழந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on: September 16, 2025 at 11:06 am
Updated on: September 16, 2025 at 8:37 pm
புதுடெல்லி, செப்.16, 2025: தென்மேற்கு டெல்லியில் உள்ள தௌலா குவான் என்ற இடத்தில், நிதி அமைச்சகத்தின் துணைச் செயலாளர் நவ்ஜோத் சிங், மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் சென்றபோது பி.எம்.டபிள்யூ (BMW) கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மனைவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பி.எம்.டபிள்யூ காரை ஓட்டி வந்த பெண் காவலில் விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (செப்.14, 2025) மதியம், மத்திய டெல்லியில் உள்ள பங்களா சாஹிப் குருத்வாராவில் இருந்து தம்பதியினர் திரும்பிக் கொண்டிருந்தபோது நடந்துள்ளது.
போலீசார் சம்பவ இடத்தை அடைந்தபோது, மெட்ரோ தூண் எண் 67 அருகே உள்ள பிரிப்பான் அருகே ஒரு பி.எம்.டபிள்யூ கார் பக்கவாட்டில் திரும்பி நின்றதையும், ஒரு மோட்டார் சைக்கிள் இருப்பதையும் கண்டனர். நேரில் கண்டவர்கள், ஒரு பெண் காரை ஓட்டி வந்ததாக தெரிவித்தனர். அவரும் அவரது கணவரும் ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் எனத் தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி, “சாலை விபத்தில் ஒருவர் இறந்துவிட்டதாகவும், அவருடன் வந்த மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவமனையிலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது” என்றார். இறந்தவர் ஹரி நகரில் வசிப்பவர். காயமடைந்த அவரது மனைவி சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் விபத்து குறித்து அதிகாரி, “அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கார் மோதியது” என்றார்.
காரை ஓட்டி வந்த பெண் மற்றும் அவரது கணவரும் காயமடைந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஹரியானாவின் குருகிராமில் வசிப்பவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : உத்தரப் பிரதேசத்தில் காவல் நிலையம் முற்றுகை.. 200 பேர் மீது எஃப்.ஐ.ஆர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com