சத்தீஸ்கர்- தெலங்கானா எல்லையில் 3 நக்சல்கள் பலி.. பாதுகாப்பு படை அதிரடி!

3 Naxals killed in encounter: சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published on: April 24, 2025 at 3:15 pm

ராய்ப்பூர், ஏப்.24 2025: சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில் வியாழக்கிழமை (ஏப்.24 2025) பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைகளில் உள்ள ஒரு காட்டில் இந்தத் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.

இந்தப் பகுதி இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் அமைந்துள்ளது. இந்நிலையில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக்காக பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு காலையில் அப்பகுதியில் முகாமிட்டிருந்தனர்.
அப்போது, துப்பாக்கிச் சண்டை நடந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், இதுவரை, என்கவுன்டர் நடந்த இடத்திலிருந்து மூன்று நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் பல மாவோயிஸ்டுகளும் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். பஸ்தார் பிராந்தியத்தில் தொடங்கப்பட்ட மிகப்பெரிய கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இது உள்ளது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையில், மாவட்ட ரிசர்வ் காவலர் (DRG), பஸ்தார் சிறப்பு பணிக்குழு (STF), மாநில காவல்துறையின் அனைத்து பிரிவுகள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மற்றும் அதன் உயரடுக்கு கமாண்டோ பட்டாலியன்கள் (CoBRA) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 10,000 பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த நடவடிக்கையில் தெலங்கானா போலீசாரும் ஈடுபட்டிருந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : Pahalgam terror attack: திடீரென கேட்ட துப்பாக்கி சப்தம், விழுந்த உடல்கள்; இந்து பேராசிரியர் தப்பியது எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com