டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் நெரிசல்.. 18 பேர் உயிரிழப்பு

Delhi Railway Station Stampede: டெல்லி கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

Published on: February 16, 2025 at 3:45 pm

டெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (பிப்.15, 2025) இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து டெல்லி காவல்துறை, “நேற்று இரவு 10 மணியளவில் புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 14 பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்” என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

புது டெல்லி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜுக்கு ரயில்களில் ஏறுவதற்காக காத்திருந்த பயணிகள் கூட்ட நெரிசல் திடீரென அதிகரித்ததால் இந்த நெரிசல் ஏற்பட்டதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள ஏராளமானோர் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர்.

இந்நிலையில், 14 மற்றும் 15வது நடைமேடைகளில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குழப்பத்திற்கு வழிவகுத்தது, இறுதியில் இந்த துயரமான கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது.

காங்கிரஸ் கண்டனம்

இந்த கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு ஏற்று ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க பெங்களூரு மெட்ரோ ரயில் டிக்கெட் கடும் உயர்வு.. டெல்லி, மும்பையை விட அதிகரிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com