டேஸ்டி ஸ்ட்ரீட் புட்.. வீட்டிலேயே வடகறி செய்யலாம்.. இதை நோட் பண்ணுங்க!

Food: இட்லி, தோசை, இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடிய சுவையான வடகறி இப்படி பண்ணுங்க.

Published on: February 21, 2025 at 1:36 pm

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய ருசியான வடகறி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சிலை -1
பட்டை-1
கிராம்பு-2
ஏலக்காய்- 2
சோம்பு – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை -1 கொத்து
பெரிய வெங்காயம் -2
உப்பு – தேவையான அளவு
மிளகாய் -1
இஞ்சி, பூண்டு விழுது-1 டீஸ்பூன்
புதினா இலை -1 கைப்பிடி அளவு
கொத்தமல்லி இலை -1 கைப்பிடி அளவு
தக்காளி -1
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
சீரகத்தூள் – ½ டீஸ்பூன்
சோம்புத்தூள் -½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

அரைக்க வேண்டியவை

கடலை பருப்பு -1 கப்
பச்சை மிளகாய் -3
சீரகம் -1 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் -¼ டீஸ்பூன்

செய்முறை

ஒரு கப் கடலை பருப்புடன் தண்ணீர் சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். கடலை பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் மிளகாய், சீரகம், சோம்பு, தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இந்த மாவினை பருப்பு வடை போன்று தட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் தயார் செய்து வைத்த வடைகளை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். வடைகளை ஆவியில் வேக வைத்தும் எடுத்துக் கொள்ளலாம். வடை பொன்னிறமாக மாறுவதற்கு முன்னரே எண்ணெயிலிருந்து எடுத்து விட வேண்டும். மாவினை பக்கோடா போன்று உதிரியாகவும் எண்ணெயில் சேர்த்து பொரிக்கலாம்.

தயார் செய்து வைத்த வடைகள் ஆரிய பின்னர் உதிர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இதனுடன் நீலவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கிய பின்னர் இதனுடன் மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, புதினா இலை, மல்லி இலை மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வெந்த பின்னர் இதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும். ஒரு கப் கடலை பருப்பிற்கு மூணு கப் தண்ணீர் சரியான அளவு ஆகும்.

குழம்பிற்கு தேவையான உப்பினை சரி பார்த்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் உதிர்த்து வைத்த வடைகளை சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் குக்கரை மூடி ஹை ஃப்ளேமில் வைத்து நான்கு விசில் வரும் வரை வேக விட வேண்டும். குக்கரில் ஆவி முழுவதுமாக வெளியேறிய பின்னர் மூடியை திறக்கவும். இப்போது சுவையான வடகறி தயார். இந்த வடகறி இட்லி, தோசை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க செம்ம டேஸ்டா சென்னா மசாலா.. இப்படி செஞ்சு அசத்துங்க !

நான்வெஜ் பிரியர்களுக்கு செம்ம டிரீட்.. மட்டன் கோலா உருண்டை இப்டி செஞ்சு பாருங்க..சுவை நாக்கிலேயே நிற்கும்!
How to make Mutton Kola Urundai

நான்வெஜ் பிரியர்களுக்கு செம்ம டிரீட்.. மட்டன் கோலா உருண்டை இப்டி செஞ்சு பாருங்க..சுவை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com