Peddi Box Office: ராம் சரண் நடிப்பில் வெளியாகி உள்ள ‘பெத்தி’ திரைப்படம் நான்காவது நாளிலும் வலுவான வசூலைத் தொடர்ந்து வருகிறது.
Peddi Box Office: ராம் சரண் நடிப்பில் வெளியாகி உள்ள ‘பெத்தி’ திரைப்படம் நான்காவது நாளிலும் வலுவான வசூலைத் தொடர்ந்து வருகிறது.

Published on: June 8, 2026 at 2:56 pm
ஹைதராபாத், ஜுன் 8 2026: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ள பெத்தி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் நடித்துள்ள இந்த பான்-இந்திய விளையாட்டு பின்னணிக் கதை திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இருப்பினும், படத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ள அச்சியம்மா கதாபாத்திரத்தின் சித்தரிப்பு குறித்து சில தரப்பினரிடையே கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இருப்பினும், படம் வசூல் வேட்டையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
சக்னில்க் வெளியிட்ட தகவலின்படி, ‘பெத்தி’ திரைப்படம் வெளியாகி நான்காவது நாளில் ₹31.90 கோடி வசூலித்துள்ளது. இது சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது சிறிய அளவு அதிகரிப்பு ஆகும். படம் வெளியான முதல் நாளில் படம் ₹51 கோடி வசூலித்தது, அதுவே இதுவரை அதிக வசூல் பெற்ற நாள். முதல் நாளில் மட்டும் 82 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி, ₹20 கோடி முன்பதிவு வசூல் கிடைத்தது. படம் 3,000 திரையரங்குகளில் ஜூன் 4ஆம் தேதி வெளியானது. இதுவரை இந்திய அளவில் ரூ.186.69 கோடி மொத்த வசூலையும், ரூ.157.15 கோடி நிகர வசூலையும் ஈட்டியுள்ளது.
படத்தில் ராம் சரண் நடித்த பெத்தி என்ற கதாபாத்திரம், விளையாட்டின் மூலம் தன்னை நிரூபிக்கும் விதமாக கதை நகர்கிறது. கிரிக்கெட், குஸ்தி, ஓட்டம் போன்ற பல விளையாட்டுகளை அவர் கற்றுக்கொண்டு, இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கிறார். முக்கியமான சமூக கருத்தை எடுத்துரைத்ததற்காக படம் பாராட்டப்பட்டாலும், ஜான்வி கபூர் நடித்த அச்சியம்மா கதாபாத்திரம் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், அதிகப்படியான பாலியல் கவர்ச்சியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் நடிகை டிம்பிள் ஹயாதி, ஜான்விக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். “நடிகைகளை குற்றம் சாட்டாமல், கதாபாத்திரங்களை எழுதும் முறையையும், படைப்பாளிகளின் தேர்வுகளையும் கேள்வி கேட்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து இயக்குநர் புச்சி பாபு சனா, “சினிமா யாருக்கும் அவமரியாதை ஏற்படுத்தக்கூடாது. சில காட்சிகள் பார்வையாளர்களுக்கு அசவுகரியமாக இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்” என அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் சினிமா பார்வையாளர்களின் பார்வைக்கு ஏற்ப மாற வேண்டும் என்றும், படைப்பாளிகள் அதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: நடிகை மது கன்னத்தில் அறைந்த நானா படேகர்.. பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com