Director Ram Gopal Varma: தெலுங்கு திரையுலகில் சர்ச்சை இயக்குனர் என பெயர் எடுத்த ராம்கோபால் வர்மா, ” கைது செய்ய வந்த போலீசார் உடன் இணைந்து சரக்கு அடித்தேன்” என பேசியுள்ளார்.
Director Ram Gopal Varma: தெலுங்கு திரையுலகில் சர்ச்சை இயக்குனர் என பெயர் எடுத்த ராம்கோபால் வர்மா, ” கைது செய்ய வந்த போலீசார் உடன் இணைந்து சரக்கு அடித்தேன்” என பேசியுள்ளார்.
Published on: April 4, 2025 at 5:48 pm
இந்தி மற்றும் தெலுங்கில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ராம்கோபால் வர்மா. இவரின் சமீபத்திய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சையாக ட்விட் செய்ததாக ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ராம் கோபால் வர்மாவை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது ராம்கோபால் வர்மா இந்த வழக்கு தொடர்பாக நான் ஏற்கனவே எனது வழக்கறிஞரிடம் பேசி விட்டேன்.
இந்த வழக்கு தொடர்பாக என்னை கைது செய்ய முடியாது என அவர் தெளிவுபடுத்தி உள்ளார். ஆகவே இந்த விஷயத்தில் நீங்கள் வழக்கறிஞரை தொடர்பு கொண்டு பேசுங்கள்” என்றேன்.
மேலும் என்னை கைது செய்ய போலீசார் வந்திருப்பது கூட எனக்கு அப்போது தெரியாது. ஹிந்தி பட தயாரிப்பாளர் ஒருவர்தான் உன்னை கைது செய்ய போலீசார் வருகிறார்கள் பார்த்து கவனம் என கூறினார்.
இந்த நிலையில் வழக்கறிஞரிடம் பேசி இது குறித்து நாம் போலீசாரிடம் பேசிய போது.. போலீசாருக்கு என்ன செய்வது என தெரியவில்லை. தொடர்ந்து அவர்களுக்கு நான் மது கொடுத்தேன்.
நாங்கள் அனைவரும் இணைந்து மது குடித்தோம்; பின்னர் அவர்கள் என்னிடம் சிரித்து பேசிவிட்டு கிளம்பி விட்டார்கள்” என தெரிவித்தார். ராம் கோபால் வர்மாவின் இந்த பேச்சு மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் நடிகைகள் குறித்தும் ராம் கோபால் வர்மா சர்ச்சையாக பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ஹே மேரா தில்.. கவர்ச்சி படங்களை பதிவேற்றிய கரீனா கபூர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com