ரூ.42 லட்சத்தை இழந்த நடிகர் சூர்யா பாதுகாப்பு அதிகாரி.. விசாரணையில் திடுக்.. முழு விவரம்!

Actor Suriya: நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் ஏமாற்றிய புகாரின் அடிப்படையில், நடிகரின் வீட்டில் பணிபுரிந்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: September 25, 2025 at 11:45 am

சென்னை, செப்.25, 2025: நடிகர் சூர்யாவின் குடும்பத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான அந்தோணி ஜார்ஜ் பிரபு, சூர்யாவின் வீட்டு வேலைக்காரர் மற்றும் அவரது குடும்பத்தினரால் ரூ.42 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல பாதிக்கப்பட்டவர்களிடம் மோசடி செய்துள்ளதாகவும், மொத்தம் ரூ.2 கோடியை பறித்துள்ளதாகவும் சென்னை போலீசார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “சூர்யாவின் வீட்டில் வேலை செய்யும் சுலோச்சனா, தனது மகனுடன் சேர்ந்து, பிரபுவை போலி முதலீட்டுத் திட்டத்தில் ஈர்த்துள்ளனர்” என்றனர். அதாவது, அவர்கள் ₹1 லட்சம் முதலீட்டிற்கு 30 கிராம் தங்கத்தை திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை நம்பிய பிரபு, இந்த ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரை சுமார் ₹42 லட்சத்தை மாற்றினார் எனப் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : வாழ்நாளில் அசைவம் சாப்பிட்டதே இல்லை.. சிக்கன் என தெரிந்தவுடன் வாந்தி.. சாக்ஷி அகர்வால்!

வழக்குப்பதிவு

இந்த விவகாரத்தில் ஜூலை மாதம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.

இந்த வழக்கில், பாலாஜி, பாஸ்கர், சுலோச்சனா மற்றும் விஜயலட்சுமி ஆகிய நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். அதே நேரத்தில் மேலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : மெய்யழகன் மலையாளத்தில் வந்திருந்தால்… பிரேம் குமார் பதில் இதுதான்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com