ITR filing due date extended: ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. புதிய காலக்கெடு என்ன தெரியுமா?
ITR filing due date extended: ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. புதிய காலக்கெடு என்ன தெரியுமா?
Published on: September 16, 2025 at 7:32 pm
புதுடெல்லி, செப்.16, 2025: 2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை இன்னும் தாக்கல் செய்யாதவர்கள், எந்த அபராதமும் செலுத்தாமல் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, வருமான வரித் துறை செப்டம்பர் 16 செவ்வாய்க்கிழமை வரை காலக்கெடுவை மேலும் ஒரு நாள் நீட்டித்துள்ளது. முன்னதாக, அபராதம் இல்லாமல் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 திங்கள்கிழமை ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, வருமான வரி வருமானம் 2024-2025 நிதியாண்டில் ஈட்டப்பட்ட வருமானத்திற்கான மதிப்பீட்டு ஆண்டு 2025-26 க்கு தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், பயன்பாடுகளில் மாற்றங்களைச் செயல்படுத்த, செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:00 மணி ஐ.டி.ஆர்-க்கான மின்-தாக்கல் போர்டல் பராமரிப்பு முறையில் இருந்ததாக ஐடி துறை தெரிவித்துள்ளது.
7.3 கோடி வருமான வரித்தாக்கல்
செப்டம்பர் 15 திங்கட்கிழமை வரை 7.3 கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டின் 7.28 கோடியை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் vs வங்கி எஃப்.டி. எது பெஸ்ட் முதலீடு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com