EPFO withdrawal through UPI: இ.பி.எஃப்.ஓ, யு.பி.ஐ உடன் இணைக்கப்பட்டவுடன், சந்தாதாரர்கள் தங்கள் கோரிக்கைத் தொகையை டிஜிட்டல் வாலட் மூலம் எளிதாக அணுக முடியும்.
EPFO withdrawal through UPI: இ.பி.எஃப்.ஓ, யு.பி.ஐ உடன் இணைக்கப்பட்டவுடன், சந்தாதாரர்கள் தங்கள் கோரிக்கைத் தொகையை டிஜிட்டல் வாலட் மூலம் எளிதாக அணுக முடியும்.
Published on: February 27, 2025 at 12:41 pm
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழுவின் நிர்வாகக் குழு யுனைடெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) உடன் ஒருங்கிணைக்கும் திட்டத்தை அங்கீகரித்துள்ளது, இது பணியாளர்களுக்கு சிறந்த வரப்பிரசாதம் ஆகும். முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற அதன் கூட்டத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கோரிக்கைகளை திரும்பப் பெறக்கூடிய கட்டமைப்பு குறித்து குழுவிற்கு விளக்கப்பட்டது.
இதையும் படிங்க : ரூ.1,000 முதல் ரூ.30 லட்சம் வரை முதலீடு.. மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்
இது குறித்து அதிகாரி ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்திய தேசிய கட்டணக் கழகம் தொழில்நுட்ப அம்சங்களை ஆராய்ந்து வருகிறது. ஆனால் திட்டத்தை செயல்படுத்தத் தயாராக உள்ளது என்றார். மேலும், UPI மூலம் உரிமைகோரல்களை திரும்பப் பெறுவதற்கு மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் அவசியம். இது முடிந்தவுடன், அம்சம் (UPI திரும்பப் பெறுதல்) வெளியிடும்.
2025 ஆம் நிதியாண்டில் இதுவரை, இ.பி.எஃப்.ஓ 50 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கான கோரிக்கைகளை செயல்படுத்தியுள்ளது. இ.பி.எஃப்.ஓ, யு.பி.ஐ உடன் இணைக்கப்பட்டவுடன், சந்தாதாரர்கள் தங்கள் கோரிக்கைத் தொகையை டிஜிட்டல் வாலட் மூலம் எளிதாக அணுக முடியும். இந்தத் திட்டம் 2025 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கடன் வட்டி விகிதம் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைப்பு: பஞ்சாப் நேஷனல் வங்கி அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com