புதுடெல்லி, ஆக.26 2025: அடுத்த 40-50 ஆண்டுகள் பாரதிய ஜனதா ஆட்சிதான் என்பது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எப்படி தெரியும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
பீகாரில் ராகுல் காந்தி பரப்புரை
பீகார் மாநிலம் மதுபானி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக பேசிய அவர், “அமித் ஷாவின் பேச்சை பாருங்கள்.
அடுத்து 40-50 ஆண்டுகள் வரை பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் எனக் கூறுகிறார். இது அவருக்கு எப்படி தெரியும்? இதற்கும் வாக்கு திருட்டுக்கும் தொடர்பு உள்ளது. அமித் ஷாவின் கூற்று உங்களுக்கு வித்தியாசமாக இல்லையா? அது இயல்புக்கு மாறாக உள்ளது” என்றார்.
மேலும், “அடுத்த 40-50 ஆண்டுகள் வரை பா.ஜ.க ஆட்சிதான் என அவரால் எப்படி கூற முடியும்?” என்றும் ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து, “நான் பொய் கூறவில்லை; வாக்கு திருட்டுக்கு பின்னால் உள்ள உண்மை என்ன? அது மக்களுக்கு தெரிய வேண்டும்” என்றார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் பாரதிய ஜனதா மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டில், பாரதிய ஜனதா வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பிரமாண பத்திரம் or மன்னிப்பு.. ராகுல் காந்திக்கு சிக்கலான ‘வாக்கு திருட்டு’!
Border 2 worldwide box office collection Report: சன்னி தியோல், வருண் நடிப்பில் பார்டர் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது….
Rohit Shettys Mumbai Home: பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்….
Tamil Nadu person was attacked in Bengaluru: பெங்களூருவில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தனது கண்டனத்தை மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்….
Pramit Jhaveri to Tata Trusts: பிரமித் ஜாவேரி தனது பதவிக்காலம் முடிந்த நிலையில், டாடா டிரஸ்ட்ஸிலிருந்து விலகுகிறார். அவர் 2020 பிப்ரவரி 12 முதல் சர்…
Thol Thirumavalavans remarks about Tamil kings: தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? எனக் கேள்வியெழுப்பியுள்ள டி.டி.வி தினகரன், தொல்….
Thailand Masters quarterfinals: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் இஷராணி பாருவா, தென் கொரியாவின் சங் ஷுவோ யுன்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்….