புதுடெல்லி, ஆக.26 2025: அடுத்த 40-50 ஆண்டுகள் பாரதிய ஜனதா ஆட்சிதான் என்பது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எப்படி தெரியும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
பீகாரில் ராகுல் காந்தி பரப்புரை
பீகார் மாநிலம் மதுபானி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக பேசிய அவர், “அமித் ஷாவின் பேச்சை பாருங்கள்.
அடுத்து 40-50 ஆண்டுகள் வரை பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் எனக் கூறுகிறார். இது அவருக்கு எப்படி தெரியும்? இதற்கும் வாக்கு திருட்டுக்கும் தொடர்பு உள்ளது. அமித் ஷாவின் கூற்று உங்களுக்கு வித்தியாசமாக இல்லையா? அது இயல்புக்கு மாறாக உள்ளது” என்றார்.
மேலும், “அடுத்த 40-50 ஆண்டுகள் வரை பா.ஜ.க ஆட்சிதான் என அவரால் எப்படி கூற முடியும்?” என்றும் ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து, “நான் பொய் கூறவில்லை; வாக்கு திருட்டுக்கு பின்னால் உள்ள உண்மை என்ன? அது மக்களுக்கு தெரிய வேண்டும்” என்றார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் பாரதிய ஜனதா மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டில், பாரதிய ஜனதா வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பிரமாண பத்திரம் or மன்னிப்பு.. ராகுல் காந்திக்கு சிக்கலான ‘வாக்கு திருட்டு’!
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மார்ச் 19, 2026) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Assembly Election 2026: ” யார் எந்த மாதிரியான அவதூறுகள் பரப்பினாலும் இறைவன் அருளால் நாம் நமது இலக்கை அடைய முடியும் என பேசிய தமிழக வெற்றிக்…
puducherry Election 2026: புதுச்சேரி அரசியலில் லட்சிய ஜனநாயக கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. இந்தக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது….
Chennai Acid Attack : சென்னையில் திராவகம் வீச்சுக்குள்ளான பெண் பகுதி பார்வையை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்….
Flight Seats: விமானங்களில் 60% இருக்கைகளுக்கு, “இருக்கை கட்டணம்” வசூலிக்க கூடாது என்ற உத்தரவு வெளியாகியுள்ளது….
Mallikarjun kharge: முன்னாள் பிரதமர் தேவேக விழாவின் மாநிலங்களவை பதவி நிறைவடைந்துள்ள நிலையில் அவரின் பிரிவு உபசார விழாவில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகா…