படுகொலைக்கு 4 நாள்கள் முன்பு.. ஜம்மு காஷ்மீர் இந்திரா ஆழமான பந்தம்: நினைவுக்கூர்ந்த பிரியங்கா!

Priyanka Gandhi | ஜம்மு காஷ்மீருக்கு காங்கிரஸ் மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலளர் பிரியங்கா காந்தி கூறினார்.

Published on: September 29, 2024 at 11:03 am

Priyanka Gandhi | காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி, “ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிர்வாகம் ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடத்தப்படும் “பொம்மை” அரசாங்கம் என்று லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவை விமர்சித்தார். ஜம்மு காஷ்மீரின் பிஷ்னாவில் காங்கிரஸ் பேரணியில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி உங்களுக்கும் ஜம்மு காஷ்மீருக்கும் ஒரு தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது.

உங்கள் மாநிலத்தின் நிலையை மீட்டெடுக்க விரும்புகிறோம். எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தால் உடனடியாக மாநில அந்தஸ்தை மீட்டெடுப்போம். தர்பார் இயக்கத்தின் பாரம்பரியத்தையும் நாங்கள் புத்துயிர் செய்வோம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “உங்கள் உரிமைகள், உங்கள் நிலம் மற்றும் உங்கள் வேலைக்கான உங்கள் உரிமைகளை நாங்கள் பாதுகாக்க விரும்புகிறோம்.

மேலும், “உங்களுக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வேண்டுமானால் நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது உரையில் கூறியது எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏனெனில், அவர்கள்தான் அதை எடுத்துச் சென்றார்கள் என்பதுதான் உண்மை. இது, உங்கள் டிவியை திருடிய திருடன், ‘திரும்ப வேண்டுமானால் என்னிடம் கேள்’ என்று சொல்வது போல் இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து, “அவர்கள் மட்டுமே அதைத் திருப்பித் தர முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், உங்கள் மாநில அந்தஸ்தை உடனடியாக மீட்டெடுப்போம்” எனவும் பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்தார். இதற்கிடையில் தனது பாட்டி இந்திரா காந்தி குறித்து பிரியங்கா காந்தி நினைவு கூர்ந்தார்.

அப்போது, “இந்திரா காந்தி கொல்லப்படுவதற்கு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பு, அவர் காஷ்மீர் சென்று இலையுதிர்கால இலைகளைப் பார்க்க விரும்புவதாக எங்களிடம் கூறினார். அவர் எங்களை கீர் பவானி கோவிலுக்கு அழைத்து வந்தாள், டெல்லி திரும்பிய சில நாட்களில் அவள் படுகொலை செய்யப்பட்டாள்” என்றார்.

இதையும் படிங்க : பஞ்சாப் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி; மருத்துவ அறிக்கை கூறுவது என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com