Punjab CM Bhagwant Mann Hospitalized | பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மொகாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, இருதயவியல் துறையின் இயக்குநரும் தலைவருமான டாக்டர் ஆர்.கே. ஜஸ்வால் சிகிச்சை அளித்துவருகிறார்.
இதற்கிடையில், “வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் டாக்டர் ஜஸ்வால், “பகவந்த் மானுக்கு லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் உடல் நிலை முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் அவரை கண்காணித்துவருகின்றனர். பகவந்த் மானுக்கு லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் பகவந்த் மான் முக்கியமானவர் ஆவார். இவர் திரைப்பட நகைச்சுவை நடிகராக வாழ்க்கையை தொடங்கியவர். பின்னாள்களில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து முதலமைச்சராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
India-France Ties: பாரிஸில் திறக்கப்பட்ட சுவாமிநாராயண் இந்து கோவில், இந்தியா–பிரான்ஸ் இடையேயான ஆழமான கலாசார மற்றும் ஆன்மிக உறவுக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி…
Gurpreet Singh Sekhon AAP: பஞ்சாப் 2027 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்க்ஸ்டர்-மாற்றிய அரசியல்வாதி குர்ப்ரீத் சிங் சேகோன், ஆம் ஆத்மி கட்சியில் (AAP) இணைந்துள்ளார்….
Raghav Chadha Punjab SIR controversy: பஞ்சாப் மாநில அரசியல் சூழலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் — ராஜ்யசபா எம்.பி. ராகவ் சதா, மாநிலத்தின் வரைவு…
US Hails India: இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக பதிவான நிலையில், இந்தியா துடிப்பான, வலுவான மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளாதாரம் என அமெரிக்கா பாராட்டியுள்ளது….
India Rejects Ruling: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அமலில் வைத்திருக்க வேண்டும் என ஹேக்கில் உள்ள மத்தியஸ்த நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்