அசாம், ஆக. 15, 2026: அசாமில் அஞ்சல் துறை சேவைகளை நவீனப்படுத்தும் வகையில், கிளை அஞ்சலகங்களுக்கு தபால் பைகளை டிரோன்கள் மூலம் எடுத்துச் செல்லும் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கடினமான நிலப்பரப்புகள் மற்றும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களுக்கு அஞ்சல்களை விரைவாகக் கொண்டு சேர்ப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன்மூலம் போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளிலும் அஞ்சல் சேவையை திறம்பட வழங்க முடியும்.
வழக்கமான போக்குவரத்து மூலம் செல்வது சிரமமான பகுதிகளுக்கு தபால் பைகளை டிரோன்கள் மூலம் கொண்டு சென்று, சம்பந்தப்பட்ட கிளை அஞ்சலகங்களுக்கு விநியோகிக்கும் வகையில் இந்த சேவை செயல்படுத்தப்படுகிறது. இதனால் தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அஞ்சல் சேவைகள் விரைவாக சென்றடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அசாமில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழலிலும் அஞ்சல்கள் தடையின்றி சென்றடைவதை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்படும் நேரங்களில் டிரோன் தொழில்நுட்பம் அஞ்சல் விநியோகத்திற்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் அசாம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் முழுவதும் மொத்தம் 150 டிரோன் வழித்தடங்கள் உருவாக்கப்படுகின்றன. தொலைதூர பகுதிகளுக்கான அஞ்சல் விநியோகத்தை விரைவுபடுத்துவதுடன், இயற்கைப் பேரிடர் காலங்களிலும் சேவையை தொடர்ந்து வழங்கும் வகையில் இந்த புதிய முயற்சி செயல்படுத்தப்படுகிறது. இந்திய அஞ்சல் சேவையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைதூர பகுதிகளை இணைக்கும் முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாகும்: செங்கோட்டையில் பிரதமர் மோடி உரை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்