மேகதாது அணை விவகாரம்… உச்சநீதிமன்றமே ஒரே வழி! – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உறுதி

Mekedatu Row: மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டப் போராட்டத்தை தீவிரமாக தொடரும் என்றும், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றமே ஒரே வழி என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

Published on: August 1, 2026 at 5:42 pm

திருநெல்வேலி, ஆக. 1 2026: கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிரான சட்டப் போராட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என்று தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நீர் உரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றமே தமிழகத்துக்கு உள்ள ஒரே சட்டப்பூர்வ வழி என்றும், அந்தப் போராட்டத்தை அரசு உறுதியாக தொடரும் என்றும் கூறினார்.

மேகதாது விவகாரத்தில் மத்திய ஜல்சக்தி அமைச்சர் நடுநிலையுடன் செயல்படவில்லை என்றும், கர்நாடக அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். இந்தப் பிரச்சினையை தனி மாநிலங்கள் மட்டுமே தீர்க்க முடியாது என்றும், இதில் மத்திய அரசு தலையிட்டு தனது அரசியலமைப்பு பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும், மேகதாது அணைத் திட்டத்தில் அந்த மாநிலத்தின் நிலைப்பாடு மாறவில்லை என்றும் நிர்மல்குமார் கூறினார். தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி திட்டத்தை முன்னெடுக்க கர்நாடகம் முயற்சித்து வருவதாகவும், இதனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

ராகுல் காந்தி ஏன் தலையிடவில்லை என்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்பு காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது, மேகதாது தொடர்பான அரசிதழ் அறிவிப்பு வெளியான சமயத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

மேலும், மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது குறித்து முதலமைச்சர் விஜய் முடிவு செய்வார் என்றும், தமிழகத்தின் நலனை பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட மற்றும் அரசியலமைப்பு ரீதியான நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உறுதியளித்தார்.

இதையும் படிங்க : ஆகஸ்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? ஐஎம்டி வெளியிட்ட முக்கிய கணிப்பு!

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு… செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்!
Senthil Balaji

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு… செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்ற

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com