R.S. Bharathi: கொளத்தூரில் கொத்துப் புரோட்டா என வரம்பு மீறி முதல்வர் பேசுகிறார் என தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
R.S. Bharathi: கொளத்தூரில் கொத்துப் புரோட்டா என வரம்பு மீறி முதல்வர் பேசுகிறார் என தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: July 13, 2026 at 2:49 pm
சென்னை, ஜூலை 13, 2026: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, முதல்வர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “முதல்வர் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டுள்ளார்” என ஆளுநர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தினர் அழைத்ததாக எம்.ஆர். விஜய பாஸ்கர் கூறியிருப்பதையும் பாரதி குறிப்பிட்டார்.
கரூரில் முதல்வர் விஜய் பேசிய உரைகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவை நடந்து கொண்டிருக்கும் விசாரணையை பாதிக்கும் வகையில் இருந்ததாகவும் பாரதி வலியுறுத்தினார். நீதிமன்றம், “ஆளுநரிடம் புகார் அளித்தீர்களா” என கேட்கும் என்பதால், முதலில் ஆளுநரிடம் புகார் அளித்ததாகவும், அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கொளத்தூரில் “கொத்துப் புரோட்டா போடப்பட்டது” என முதல்வர் பேசியிருப்பது வரம்பு மீறிய செயல் என பாரதி கண்டனம் தெரிவித்தார். இது, அரசியல் சூழ்நிலையை சிக்கலாக்கும் வகையில் இருந்ததாக அவர் கூறினார்.
முதல்வர் விஜய் பேச்சுகள் சட்டரீதியான விசாரணைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும், அதனை எதிர்த்து திமுக ஆளுநரிடம் புகார் அளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆளுநர் எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறார் என்பதற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : தி.மு.க முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நிலஅபகரிப்பு புகார்.. போலீசார் வழக்குப்பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com