நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு ஜாமினில் வெளிவராத பிடிவாரண்ட்.. பெங்களூரு நீதிமன்றம்

Prakash Raj : நடிகர் பிரகாஷ் ராஜ் மீது ஜாமினில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Published on: June 23, 2026 at 3:50 pm

Updated on: June 23, 2026 at 4:23 pm

பெங்களூரு, ஜூன் 23, 2026: நடிகர் பிரகாஷ் ராஜ் மீது பெங்களூரு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டைப் பிறப்பித்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் அவர் வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அவரை கைது செய்வதற்கான சாத்தியக்கூறு உருவாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக குமார் என்ற நபர் புகார் அளித்திருந்தார். அவரது கூற்றுப்படி, பிரகாஷ் ராஜ் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர் பெங்களூரு நகர காவல் ஆணையர் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை அணுகினார்.

இவ்விரு தரப்பிலிருந்தும் எந்தப் பதிலும் கிடைக்காத நிலையில், குமார் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் வழக்கை விசாரித்து, பிரகாஷ் ராஜ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு, பிரகாஷ் ராஜ் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் தீவிரமடையக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

இதையும் படிங்க :அட போங்கடா நீங்களும் உங்க தலைமையும்.. ஸ்வேதா மேனன் திடீர் முடிவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com