பாடகர் மனோ மகன்களுக்கு முன்ஜாமின்: நிபந்தனை என்னத் தெரியுமா?

Tamil Nadu | சென்னை வளசரவாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில, பாடகர் மனோ மகன்களுக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

Published on: September 21, 2024 at 11:42 am

Updated on: September 21, 2024 at 11:47 am

Tamil Nadu | சென்னை வளசரவாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் தாக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்த நிலையில் பாடகர் மனோவின் மகன்கள் ரஃபிக், சாஹீர் மற்றும் அவரது 3 நண்பர்களும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையில் மனோவின் மகன் தலைமறைவாகினர். அவர்களை பிடித்த போலீசார் தனிப்படைகள் அமைத்தனர். எனினும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில், சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனோவின் மகன்கள் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றனர்.

பூந்தமல்லி நீதிமன்றத்தில் 30 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு நீதிபதி முன்ஜாமீன் வழங்கியுள்ளார். முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நண்பர்கள் கூறுகையில், “இருவரும் உணவு வாங்க சென்றபோது மனோவின் மகன்கள் ஆபாசமாக அழைத்தனர்.

நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, முட்டிப் போட வைத்து மட்டையால் தாக்கினர்” எனக் கூறி இருந்தனர். இந்த நிலையில் மற்றொரு சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அந்தக் காட்சிகளில் மனோவின் மகன்களை கும்பல் ஒன்று தாக்குவது போல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நாகப்பட்டினம்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: மனநல ஆலோசகர் கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com