Nagapattinam | நாகப்பட்டினத்தில் உள்ள அரசு ஆதரவற்ற விடுதி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மனநல ஆலோசகர் கைது செய்யப்பட்டார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Nagapattinam | நாகப்பட்டினத்தில் உள்ள அரசு ஆதரவற்ற விடுதி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மனநல ஆலோசகர் கைது செய்யப்பட்டார்.
Published on: September 20, 2024 at 6:54 pm
Nagapattinam | நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.இந்த வழக்கில் மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து பாடம் எடுக்கும் போது சத்யபிரகாஷ் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக விடுதி கண்காணிப்பாளர் சசிகலா நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யபிரகாசை கைது செய்தனர். அரசு ஆதரவற்ற விடுதியில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : தூத்துக்குடி: போலி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com