ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 15 பேர் மீது குண்டாஸ்!

Armstrong Murder Case | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பதினைந்து பேர் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Published on: September 20, 2024 at 6:30 pm

Updated on: September 20, 2024 at 6:32 pm

Armstrong Murder Case | பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில் இதுவரை 15க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி உள்ளனர். இதில் சிலருக்கு நேரடி தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தமிழகத்தில் அரசியல் பதட்டத்தை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில், கைதான பத்து பேர் மீது ஏற்கனவே குண்டர்கள் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 15 பேர் மீது குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேரடி தொடர்புடைய ஒருவர் ஏற்கனவே என்கவுண்டர் செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கடந்த இரு தினங்களுக்கு முன்பு போலீசாரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: செல்வப் பெருந்தகையை நீக்கக் கோரி கடிதம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com