Madurai High Court : சாத்தான்குளத் தந்தை மகன் காவல் மரண வழக்கில், குற்றவாளிகளான போலீசார் 9 பேரும் ஜூன் 1ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்துக்கொள்ளலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
Madurai High Court : சாத்தான்குளத் தந்தை மகன் காவல் மரண வழக்கில், குற்றவாளிகளான போலீசார் 9 பேரும் ஜூன் 1ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்துக்கொள்ளலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Published on: April 30, 2026 at 7:00 pm
Updated on: April 30, 2026 at 7:44 pm
மதுரை, ஏப்.30, 2026: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ், ஆகியோர் கோவிட் பெருந்தொற்று ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி 2020 ஜூன் 19-ஆம் தேதி, கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இருவரும் காவல் நிலையத்தில் கடுமையான அடியால் சித்திரவதை செய்யப்பட்டனர். இந்த நிலையில், பெனிக்ஸ் ஜூன் 22-ஆம் தேதி, ஜெயராஜ் ஜூன் 23-ஆம் தேதி உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் மதுரை 1-ஆம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம்: 2026 ஏப்ரல் 6-ஆம் தேதி, 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்தது. இந்த வழக்கில் ஆய்வாளர் எஸ். ஸ்ரீதர், துணை ஆய்வாளர்கள் பி. ரகு கணேஷ், கே. பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் எஸ். முருகன், ஏ. சாமிதுரை மற்றும் காவலர்கள் எம். முத்துராஜா, எஸ். வேல்முத்து, எஸ். செல்லதுரை, எக்ஸ். தோமஸ் பிரான்சிஸ் ஆகியோர் குற்றவாளிகள் என மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மரண தண்டனைக்கு உயர் நீதிமன்றத்தின் உறுதிப்படுத்தல் அவசியம் என்பதால், வழக்கு ஐகோர்டுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, ந. ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு, 9 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் மேல்முறையீடு செய்ய விரும்புகிறார்களா எனக் கேட்டது. அதில், ஜூன் 1-க்குள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, காவல் துன்புறுத்தலுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக கருதப்படுகிறது. இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ஆம் ஆண்டு நடந்த தந்தை–மகன் காவல் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 போலீசாரும் ஜூன் 1-க்குள் மேல்முறையீடு செய்யலாம் என மதுரை ஐகோர்ட் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தஞ்சாவூரில் மண்ணுக்குள் சோழர் கால பொக்கிஷம்.. தோண்ட தோண்ட அதிசயம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com