Anil Ambani: மும்பை குடியிருப்பு மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பங்குகள் உட்பட, அனில் அம்பானி குழுமத்திற்குச் சொந்தமான ரூ. 3,034 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
Anil Ambani: மும்பை குடியிருப்பு மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பங்குகள் உட்பட, அனில் அம்பானி குழுமத்திற்குச் சொந்தமான ரூ. 3,034 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

Published on: April 30, 2026 at 2:07 pm
மும்பை, ஏப்.30, 2026: ரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு எதிரான பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பான தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் (அமலாக்கத் துறை) ரூ. 3,034 கோடி மதிப்புள்ள புதிய சொத்துக்களை முடக்கியுள்ளது என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, பி.டி.ஐ செய்தி நிறுவனம் தகவலின்படி, முடக்கப்பட்ட சொத்துக்கள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்காம்) மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Rel Infra) நிறுவனங்களுக்குச் சொந்தமானவை ஆகும்.
இவற்றில் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, கண்டாலாவில் உள்ள ஒரு பண்ணை வீடு, மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மலைவாசஸ்தலம், சனந்தில் (அகமதாபாத்) உள்ள சில நிலப் பகுதிகள் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் 7.71 கோடி பங்குகள் உள்ளிட்டவை அடங்கும்.
அமலாக்கத் துறை விசாரணை
அனில் அம்பானி குழும நிறுவனங்களும் மத்திய புலனாய்வுத் துறையின் (CBI) விசாரணையில் உள்ளன. சமீபத்தில், ஏப்ரல் 20 அன்று, அனில் அம்பானி குழும நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் (RCOM) இரண்டு மூத்த நிர்வாகிகளான அனில் கல்யா மற்றும் டி. விஸ்வநாத் ஆகியோரை சி.பி.ஐ கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பஜாஜ் ஃபைனான்ஸ் வாரியம்.. ராஜீவ் பஜாஜ் ராஜினாமா? உருவாகிறது பஜாஜ் ஆட்டோ கிரெடிட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com