RBI: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா டேராடூனில் உள்ள நிதி எழுத்தறிவு முகாமைப் பார்வையிட்டார்.
RBI: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா டேராடூனில் உள்ள நிதி எழுத்தறிவு முகாமைப் பார்வையிட்டார்.

Published on: April 28, 2026 at 3:36 pm
புதுடெல்லி, ஏப்.28, 2026: உத்தரகண்ட மாநிலம், தேஹ்ராடூன் மாவட்டத்தில் உள்ள போபால் பானி, படாசி, சோடா-சரோலி கிராம பஞ்சாயத்துகளின் சுய உதவி குழு உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட நிதி கல்வி முகாமில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மாலோத்ரா திங்கள்கிழமை (ஏப்.27, 2026), பங்கேற்றார்.
அந்த நிகழ்வில், மக்கள் நிதி விழிப்புணர்வை மேம்படுத்த, செழிப்பு மற்றும் நீண்டகால நிதி நிலைத்தன்மையை ஊக்குவிக்க, மேலும் மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் காப்பீடு தொடர்பான சமூகத் திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என அவர் ஊக்குவித்தார்.
மேலும், நிதி கல்வி மைய அதிகாரிகள், சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களுக்கும், நிதி கல்வி வழங்க அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : வங்கித் துறையில் ஏ.ஐ அபாயங்கள்.. நிர்மலா சீதாராமன் ஆலோசனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com