Donald Trump: ஈரான் படைகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Donald Trump: ஈரான் படைகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Published on: March 17, 2026 at 10:17 am
நியூயார்க், மார்ச் 17 2026: அமெரிக்கா ஈரான் இடையே போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில்
ஈரானின் தலைமை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானின் கடற்படையும், விமானப் படையும் முற்றிலும் அழிக்கப்பட்டது.
ஈரான் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடலில் கண்ணிவெடி வைக்கும் ஈரானின் 30 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டது. மீண்டும் கட்டமைக்க முடியாத அளவுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணை அனைத்து கப்பல்களும் சென்று வரும் வகையில் இருக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் ஹோர்முஸ் நீரிணையை காக்க உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பற்றி எரிந்த தீ.. துபாய் விமான நிலையத்தில் பரபரப்பு.. சேவைகள் மூடல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com